திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 694 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
694பெருமாள் திருமொழி || (தரு துயரம் தடாயேல்) - திருவித்துவக் கோட்டம்மானையே வேண்டி நிற்றல் 7
எத்தனையும் வான் மறந்த காலத்தும் பைம் கூழ்கள் மைத்து எழுந்த மா முகிலே பார்த்து இருக்கும் மற்றவை போல் மெய் துயர் வீட்டா விடினும் வித்துவ கோட்டு அம்மா! என் சித்தம் மிக வுன் பாலே வைப்பன் அடியேனே
பதவுரை Show / Hide
வான், Vaan - மேகமானது
எத்தனையும் வறந்த காலத்தும், Ethanaiyum Varandha Kaalaththum - எவ்வளவு காலம் மழை பெய்யாமல் உபேக்ஷித்தாலும்
பைங் கூழ்கள், Paing Kuzhgal - பசுமை தங்கிய பயிர்கள்
மைத்து எழுந்த மாமுகிலே பார்த்து இருக்கும், Maiththu Ezhundha Maamugile Paarthu Irukkum - கருநிறங் கொண்டு கிளம்புகின்ற பெரிய மேகங்களையே எதிர்பார்த்திருக்கும்;
அவை போல், Avai Pol - அப் பயிர்கள் போல.
மெய் துயர் வீட்டா விடினும், Mei Thuyar Veetta Vidinum - தவறாது அனுபவிக்கப்படுகிற என் துன்பங்களை நீ போக்காமல் உபேக்ஷித்தாலும்
அடியேன், Adiyen - உனக்கு தாஸனாகிய நான்
என் சித்தம் உன் பாலே மிக வைப்பன், En Sittam Un Paale Mika Vaippan - என் மநஸ்ஸை உன்னிடத்திலேயே மிகவும் செலுத்துவேன்.