திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 696 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
696பெருமாள் திருமொழி || (தரு துயரம் தடாயேல்) - திருவித்துவக் கோட்டம்மானையே வேண்டி நிற்றல் 9
நின்னையே தான் வேண்டி நீள் செல்வம் வேண்டாதான் தன்னையே தான்  வேண்டும் செல்வம் போல் மாயத்தால் மின்னையே சேர் திகிரி வித்துவ கோட்டு அம்மா ! நின்னையே தான் வேண்டி நிற்பன் அடியேனே
பதவுரை Show / Hide
வித்துவக்கோடு அம்மா!, Vithuvakkodu Amma - ;
நின்னையே வேண்டி, Ninnaiye Vendi - உன்னையே விரும்பி
நீள் செல்வம் வேண்டா தான் தன்னையே, Neel Selvam Venda Than Thannaiye - மிக்க ஸம்பத்தை விரும்பாதவனையே
தான் வேண்டும், Than Vendum - தானாகவே வந்து சேர விரும்புகிற
செல்வம் போல், Selvam Pol - அந்த ஐச்வரியம் போல,
மாயத்தால், Maayathaal - (உன்) மாயையினால் (நீ என்னை உபேக்ஷித்தாயாகிலும்)
அடியேன், Adiyen - உனது அடியவனான நான்
நின்னையே வேண்டி நிற்பன், Ninnaiye Vendi Nirpan - உன்னையே அடைய விரும்பி நிற்பேன்.