திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 697 | பெருமாள் திருமொழி || (தரு துயரம் தடாயேல்) - திருவித்துவக் கோட்டம்மானையே வேண்டி நிற்றல் 10 | வித்துவ கோட்டு அம்மா ! நீ வேண்டாயேயா யிடினும்
மற்றாரும் பற்றிலேன் என்று அவனை தாள் நயந்த
கொற்ற வேல் தானை குலசேகரன் சொன்ன
நல் தமிழ் பத்தும் வல்லார் நண்ணார் நரகமே | பதவுரை Show / Hideநீ வேண்டாயே ஆயிடினும், Nee Vendaaye Aayidinum - நீ (என்னை) உபேக்ஷித்தாயாகிலும் மற்று ஆரும் பற்றிலேன் என்று, Mattru Aarum Patrilen Endru - வேறு எவரையும் நான் சரணடைய மாட்டேன்’ என்று, Endru - என்று (அத்யவஸாயத்தை வெளியிட்டு) அவனை தாள் நயந்து, Avanai Thaal Nayandhu - அவ்வெம்பெருமானது திருவடிகளிலேயே ஆசை கொண்டு கொற்றம் வேல் தானை குலசேகரன் சொன்ன, Kotrham Vel Thaanai Kulashekaran Sonna - வெற்றியைத் தரும் வேலாயுதத்தையும் நல் தமிழ் பத்தும், Nal Tamil Pathum - நல்ல தமிழ்ப்பாடல்கள் பத்தையும் வல்லார், Vallaar - ஓத வல்லவர்கள் நரகம் நண்ணார், Naragam Nannaar - (கொடிய பாவங்கள் செய்திருந்தாலும்) நரகத்திற் சேர மாட்டார்கள். |