| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 70 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஐந்தாம் திருமொழி - உய்யவுலகு) (தலையைநிமிர்த்து முகத்தை அசைத்து ஆடுதல், செங்கீரைப்பருவம்) 7 | துப்புடையயார்கள்தம்சொல்வழுவாதுஒருகால் தூயகருங்குழல்நல்தோகைமயிலனைய நப்பினைதன்திறமாநல்விடையேழவிய நல்லதிறலுடையநாதனும்ஆனவனே. தப்பினபிள்ளைகளைத்தனமிகுசோதிபுகத் தனியொருதேர்கடவித்தாயொடுகூட்டிய என் அப்ப. எனக்குஒருகால்ஆடுகசெங்கீரை ஆயர்கள்போரேறே. ஆடுகஆடுகவே. –1-5-7 | துப்பு உடை,Thuppu udai - நெஞ்சில் கடினத் தன்மை யுடையரான ஆயர்கள் தம்,Aayargal tham - இடையர்களுடைய சொல்,Sol - வார்த்தையை வழுவாது,Vazhuvaadhu - தப்பாமல் ஒரு கால்,Oru kaal - ஒரு காலத்திலே தூய,Thooya - அழகியதாய் கரு,Karu - கறுத்திரா நின்றுள்ள குழல்,Kuzhal - கூந்தலையுடையளாய் நல் தோகை,Nal thogai - நல்ல தோகையையுடைய மயில் அனைய,Mayil anaiya - மயில்போன்ற சாயலை யுடையளான நப்பின்னை தன் திறமா,Nappinnai than thiramaa - நப்பின்னைப் பிராட்டிக்காக நல்,Nal - (கொடுமையில்) நன்றான விடைஏழ்,Vidai ezh - ரிஷபங்களேழும் அவிய,Aviya - முடியும்படியாக நல்ல திறல் உடைய,Nalla thiral udaiya - நன்றான மிடுக்கை யுடையனாய் நாதன் ஆனவனே,Naadhan aanavane - அவ்விடையர்களுக்கு ஸ்வாமியானவனே! தன்,Than - தன்னுடைய மிகு சோதி,Migu sothi - நிரவதிக தேஜோரூபமான் பரமபதத்திலே புக,Puga - செல்லும்படியாக தனியே,Thaniye - தனியே ஒரு,Oru - ஒப்பற்ற தேர்,Ther - தேரை கடலி,Kadali - கடத்தி தப்பின,Thappina - கை தப்பிப்போன பிள்ளைகளை,Pillaihalai - வைதிகன் பிள்ளைகளை தாயொடு கூட்டிய,Thaaiodu kootiya - தாயோடு கூட்டின என் அப்ப,En appa-en appane - என் அப்பனே! எனக்கு,Enakku - எனக்காக ஒரு கால்,Oru kaal - ஒரு விசை செங்கீரை ஆடுக,Sengkirei aaduga - செங்கீரை யாடி யருள வேணும்; ஆயர்கள்,Aayargal - இடையர்களுக்கு விதேயனாய் போர் ஏறே,Por aerae - போர்செய்ய நின்ற ரிஷபம் போலே செருக்கி யிரா நின்ற கண்ணனே! ஆடுக ! ஆடுக!!,Aaduga aaduga - ஆடுக ! ஆடுக!! |