திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 708 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
708பெருமாள் திருமொழி || (ஆலை நீள் கரும்பு) - சேய் வளர் காட்சியின் சீரை யசோதை போல் தாய் தேவகி பெறாத் தாழ் வெண்ணிப் புலம்பல் 1
ஆலை நீள் கரும்பு அன்னவன் தாலோ அம்புயத் தடம் கண்ணினன் தாலோ வேலை நீர் நிறத் தன்னவன் தாலோ வேழ போதக மன்னவன் தாலோ ஏலவார் குழல் என் மகன் தாலோ என்று என்று உன்னை என் வாய் இடை நிறைய தால் ஒலித்திடும் திரு வினை இல்லாத தாயிற் கடை யாயின தாயே
பதவுரை Show / Hide
ஆலை நீள் கரும்பு அன்னவன், Aalai Neel Karumbu Annavan - ஆலையிலிட்டு ஆடத் தகுந்த நீண்ட கரும்பு போன்ற கண்ணனே!
தாலோ, Thalo - (உனக்குத்) தாலாட்டு
அம்புயம் தட கண்ணினன், Ambuyam Thada Kanninann - தாமரை போன்று விசாலமான திருக் கண்களை உடையவனே!
தாலோ, Thalo - தாலேலோ;-
வேலை நீர் நிறத்து அன்னவன், Velai Neer Nirathu Annavan - கடலின் நிறம் போன்ற நிறத்தை யுடையவனே!.
தாலோ, Thalo - தாலேலோ
வேழம் போதகம் அன்னவள், Vezham Podhagam Annaval - யானைக் குட்டி போன்றவனே!
தாலோ, Thalo - தாலேலோ;
ஏலம் வார் குழல், Elam Vaar Kuzhal - பரிமளம் மிக்கு நீண்ட திருக் குழலை யுடைய!
என் மகன், En Magan - என் மகனே!
தாலோ, Thalo - தாலேலோ;
என்று என்று, Endru Endru - இப்படி பலகாலுஞ்சொல்லி
என் வாயிடை நிறைய, En Vayidai Niraiya - என் வாய் திருப்தி யடையும்படி
உன்னை தால் ஒலித்திடும் திருவினை இல்லா தாயரில், Unnai Thaal Olithidum Thiruvinai Illa Thayarlil - உன்னை தாலாட்டுகையாகிற ஸம்பத்து இல்லாத தாய்மார்களில்
கடை ஆயின தாய், Kadai Aayin Thay - கடையான தாயாயிரா நின்றேன் நான் (என்கிறாள் தேவகி.)
ஆலையிலிட்டு ஆடத்தகுந்த கரும்பு என்றது, Aalaiyilittu Aadathakunda Karumbu Endrathu - நன்றாக முற்றி ரஸம் நிரம்பிய கரும்பு என்றவாறு;
அதுபோன்றவனே! என்றது, Adhuporandavaney Endrathu - “ஸர்வ ரஸ ஸர்வ கந்த “ என்று உபநிஷத்தில் ஓதியுள்ளபடி –
தாலோ, Thalo - தால் – நாக்கு குழந்தைகளை உறங்கப் பண்ணுவதற்காகப் பெண்கள் நாவை அசைத்துச் சொல்லும் சொலவு.