| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 709 | பெருமாள் திருமொழி || (ஆலை நீள் கரும்பு) - சேய் வளர் காட்சியின் சீரை யசோதை போல் தாய் தேவகி பெறாத் தாழ் வெண்ணிப் புலம்பல் 2 | வடி கொள் அஞ்சனம் எழுது செம் மலர் கண் மருவி மேல் இனிது ஒன்றினை நோக்கி முடக்கி சேவடி மலர் சிறு கரும் தாள் பொலியும் நீர் முகில் குழவியே போலே அடக்கி ஆர செஞ்சிறு விரல் அனைத்தும் அம் கை யோடு அணைந்து ஆனையில் கிடந்த கிடக்கை கண்டிட பெற்றிலன் அந்தோ! கேசவா ! கெடுவேன் கெடுவேனே | வடி கொள், Vadi Kol - கூர்மையை யுடைத்தாய் அஞ்சனம் எழுது, Anjanam Ezhuthu - மையிடப் பெற்றதாய் செம் மலர், Sem Malai - செந்தாமரை மலரை ஒத்ததான கண், Kan - கண்களாலே மேல் ஒன்றினை, Mel Onrinai - மேற்கட்டியிலே தொங்க விட்டிருக்கும் கிளி முதலியவற்றில் ஒரு வஸ்துவை இனிது, Inidhu - இனிதாக மருவி நோக்கி, Maruvi Nookki - பொருந்தப் பார்த்துக் கொண்டும் கரு தாள், Karuthal - கறுத்த புறந்தாளை யுடையதும் மலர், Malar - செந்தாமரை மலரை யொத்து சிறு, Siru - சிறுத்த சே அடி, Sae Adi - சிவந்த அகவாயை உடையதுமான திருவடிகளை முடக்கி, Mudakki - முடக்கிக் கொண்டும் நீர் பொலியும், Neer Poliyum - (கழுத்தளவும் பருகின) நீர் விளங்கப் பெற்ற முகில் குழவி போல, Mugil Kuzhavi Pola - மேகக் குட்டிப் போல, செம்சிறு விரல் அனைத்தும், Semsiru Viral Anaithum - அழகிய சிறுத்த திரு விரல்களெல்லாவற்றையும் அம் கையோடு, Am Kaiyodu - உள்ளங்கையிலே அடக்கி ஆர, Adakki Aara - அடங்கும் படி அணைந்து, Anaindhu - முடக்கிப் பிடித்துக் கொண்டும் ஆனையின் கிடந்த கிடக்கை, Anainai Kidandha Kidakkai - ஆனை கிடக்குமா போலே பள்ளி கொண்டருளுமழகை. கண்டிட பெற்றிலேன், Kandida Pettrilain - கண்டு அநுபவிக்கப் பெறாத பாவியானேன்; அந்தோ, Andho - ஐயோ! கேசவா, Kesavaa - கண்ண பிரானே! கெடுவேன் கெடுவேன், Keduvein Keduvein - ஒன்று மநுபவிக்கப்பெறாத பெரும் பாவியானேன். |