| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 71 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஐந்தாம் திருமொழி - உய்யவுலகு) (தலையைநிமிர்த்து முகத்தை அசைத்து ஆடுதல், செங்கீரைப்பருவம்) 8 | உன்னையும்ஒக்கலையில்கொண்டுதமில்மருவி உன்னொடுதங்கள்கருத்தாயினசெய்துவரும் கன்னியரும்மகிழக்கண்டவர்கண்குளிரக் கற்றவர்தெற்றிவரப்பெற்றஎனக்குஅருளி மன்னுகுறுங்குடியாய். வெள்ளறையாய். மதிள்சூழ் சோலைமலைக்கரசே. கண்ணபுரத்தமுதே. என்னவலம்களைவாய். ஆடுகசெங்கீரை ஏழுலகும்முடையாய். ஆடுகஆடுகவே. –1-5-8 | மன்னு,Mannu - (ப்ரளயத்துக்குமழியாமல்) பொருந்தி யிருக்கக் கடவ குறுங்குடியாய்,Kurungudiyai - திருக் குறுங்குடியிலே எழுந்தருளி யிருக்குமவனே! வெள்ளறையாய்,Vellaraiyai - திரு வெள்ளறையிலே வர்த்திக்குமவனே! மதிள் சூழ்,Mathil soozh - மதிலாலே சூழப்பட்ட சோலை மலைக்கு,Solai malaikku - திருமாலிருஞ்சோலை மலைக்கு அரசே,Arase - அதிபதியானவனே! கண்ணபுரத்து,Kannapuraththu - திருக் கண்ண புரத்திலே நிற்கிற அமுதே,Amudhe - அம்ருதம் போன்றவனே! என் அவலம்,En avalam - என் துன்பங்களை களைவாய்,Kalaivai - நீக்குபவனே! உன்னை,Unnai - (மகோ உதாரனான ) உன்னை ஒக்கலையில்,Okkalaiyil - இடுப்பிலே கொண்டு,Kondu - எடுத்துக் கொண்டு தம் இல்,Tham il - தங்கள் அகங்களிலே மருவி,Maruvi - சேர்ந்து உன்னொடு,Unnodu - உன்னோடு தங்கள்,Thangal - தங்களுடைய கருத்து ஆயின செய்து,Karuthu aayina seythu - நினைவுக்குத் தக்கபடி பரிமாறி வரும்,Varum - மறுபடியும் கொண்டு வாரா நிற்கிற கன்னியரும்,Kanniyarum - இளம்பெண்களும் மகிழ,Magizha - (இச் செங்கீரையைக் கண்டு) ஸந்தோஷிக்கும்படியாகவும் கண்டவர்,Kandavar - (மற்றும்) பார்த்தவர்களுடைய கண்,Kan - கண்களானவை குளிர,Kulira - குளிரும்படியாகவும் கற்றவர்,Katravar - (கவி சொல்லக்) கற்றவர்கள் தெற்றி வர,Thetri vara - பிள்ளைக் கவிகள் தொடுத்து வரும்படியாகவும் பெற்ற,Petra - உன்னை மகனாகப் பெற்ற எனக்கு,Enakku - என் விஷயத்திலே அருளி,Aruli - கிருபை செய்து செங்கீரை ஆடுக-;,Sengkirei aaduga - செங்கீரை ஆடுக-; ஏழ் உலகும்,Ezh ulagum - ஸப்த லோகங்களுக்கும் உடையாய்,Udaiyai - ஸ்வாமியானவளே! ஆடுக ஆடுக-.,Aaduga aaduga - ஆடுக ! ஆடுக!! |