திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 710 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
710பெருமாள் திருமொழி || (ஆலை நீள் கரும்பு) - சேய் வளர் காட்சியின் சீரை யசோதை போல் தாய் தேவகி பெறாத் தாழ் வெண்ணிப் புலம்பல் 3
முந்தை நன் முறை அன்புடை மகளிர் முறை முறை தம் தம் குறங்கிடை இருத்தி எந்தையே ! என் தன் குல பெரும் சுடரே ! எழு முகில் கணத்து எழில் கவரேறே! உந்தை யாவன் என்று உரைப்ப நின் செங்கேழ் விரலினும் கடை கண்ணினும் காட்ட நந்தன் பெற்றனன் நல்வினை இல்லா நாங்கள் கோன் வாசுதேவன் பெற்றிலனே
பதவுரை Show / Hide
அன்பு உடை, Anbu Udai - ப்ரீதியை யுடையவர்களான
முந்தை நல் முறை மகளிர், Mundai Nal Murai Makalir - பரம்பரையாக வருகிற நல்ல உறவு முறையை யுடைய பெண்கள்
தம் தம் குறங்கிடை, Tham Tham Kurangidai - தங்கள் தங்கள் துடைகளிலே
முறை முறை, Murai Murai - க்ரமம் க்ரமமாக
இருத்தி, Irudhi - வைத்துக் கொண்டு
எந்தையே, Endhaie - “என் அப்பனே!
என் தன் குலம் பெருசுடரே, En Than Kulam Perusudare - எங்கள் குலத்துக்குப் பெருத்ததொரு விளக்கானவனே!
எழு முகில் கணத்து, Ezhu Mukil Kanathu - (கடலில் நீரை முகந்து கொண்டு) மேலேழுகின்ற மேக ஸமூஹத்தினுடைய
எழில் கவர், Ezil Kavar - அழகைக் கவர்ந்து கொண்ட
ஏறே, Ere - “ காளை போன்றவனே!” (என்றிப்படி பலவாறாகத் துதித்து)
உந்தையாவன் என்று உரைப்ப, Undaiyavan Endru Uraippa - உன் தகப்பனார் யார்? (காட்டு,) என்றவளவிலே
நின், Nin - உன்னுடைய
செம் கேழ் விரலினும், Sem Kezh Viralinum - சிவந்து சிறந்த விரலினாலும்
கடை கண்ணினும், Kadai Kanninum - கடைக் கண்ணாலும்
காட்ட, Kaata - (இன்னார் என் தகப்பனார் என்று) காட்ட (அந்தப் பாக்கியத்தை)
நந்தன் பெற்றனன், Nandan Pettran - நந்தகோபர் பெற்றார்;
நல் வினை இல்லா நங்கள் கோன், Nal Vinai Illa Nangal Kon - பாக்யஹீநையான என்னுடைய பர்த்தாவான
வசுதேவன், Vasudevan - வஸுதேவர்
பெற்றிலன், Pettrilan - (நந்தகோபர் பெற்ற பாக்கியத்தைப்) பெறவில்லை.