திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 717 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
717பெருமாள் திருமொழி || (ஆலை நீள் கரும்பு) - சேய் வளர் காட்சியின் சீரை யசோதை போல் தாய் தேவகி பெறாத் தாழ் வெண்ணிப் புலம்பல் 10
வஞ்ச மேவிய நெஞ்சுடைப் பேய்ச்சி வரண்டு நார் நரம்பு எழக் கரிந்துக்க நஞ்சமார் தரு சுழி முலை அந்தோ ! சுவைத்து நீ அருள் செய்து வளர்ந்தாய் கஞ்சன் நாள் கவர் கரு முகில் எந்தாய் ! கடைப் பட்டேன் வெறிதே முலை சுமந்து தஞ்சம் மேல் ஒன்றி இலேன் உய்ந்து இருந்தேன் தக்கதே நல்ல தாயைப் பெற்றாயே
பதவுரை Show / Hide
வஞ்சம் மேவிய நெஞ்சு உடை பேய்ச்சி, Vanjam Meviyai Nenju Udai Paeychchi - வஞ்சனை பொருந்திய நெஞ்சை யுடையளான பூதனை யானவள்
வரண்டு, Varandu - உடம்பு சோஷித்து
எழ, Ezha - (உள்ளுள்ள ரத்தமாம்ஸங்கள) வெளியிற் கொழிக்கும் படியாகவும்
நார் நரம்பு கரிந்து உக்க, Naar Narambu Karinthu Ukka - நார் போன்ற நரம்புகள் கருகி உதிரும் படியாகவும (அவளுடைய)
நஞ்சம் ஆர் தரு சுழி முலை, Nanjam Aar Tharu Suzhi Mulai - விஷந்தீற்றிய கள்ள முலையை
நீ சுவைத்து, Nee Suvaithu - நீ ஆஸ்வாதநம் பண்ணியும்
அருள் செய்து, Arul Seidhu - (என் மேல்) கிருபையினாலே
வளர்ந்தாய், Valarnthai - உயிருடன் வளரப் பெற்றாய்
அந்தோ, Andho - ஆச்சரியம்!
கஞ்சன் நாள் கவர், Kanjan Naal Kavar - கம்ஸனுடைய ஆயுஸ்ஸை அபஹரித்த
கரு முகில் எந்தாய், Karum Mukil Endhai - காளமேகம் போன்ற நாயனே!
முலை வெறிதே சுமந்து, Mulai Veridhae Sumandhu - (நான்) முலையை வியர்த்தமாகச் சுமந்து
கடைப்பட்டேன், Kadaipattain - கெட்டவரிலும் கடைகெட்டவளானேன்;
தஞ்சம் ஒன்று இலேன், Thanjam Ondru Ilaan - (உன்னையொழிய வேற) புகலற்றிராநின்றேன்;
உய்ந்திருந்தேன், Uyandhirundhen - (என்றைக்காகிலு முன்னைக் கண்ணால் காண்போமென்று)பிராணனைப் பிடித்துக் கொண்டு ஜீவிக்கிறேன்;
தக்கது, Thakkadhu - உனக்குத் தகுதியான
நல்ல தாயை, Nalla Thaayai - நல்ல தாயாரை
பெற்றாய், Petrayi - ஸம்பாதித்துக் கொண்டாய்.