திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 718 | பெருமாள் திருமொழி || (ஆலை நீள் கரும்பு) - சேய் வளர் காட்சியின் சீரை யசோதை போல் தாய் தேவகி பெறாத் தாழ் வெண்ணிப் புலம்பல் 11 | மல்லை மா நகர்க்கு இறையவன் தன்னை
வான் செலுத்தி வந்து ஈங்கு அணை மாயத்து
எல்லையில் பிள்ளை செய்வன காணாத்
தெய்வ தேவகி புலம்பிய புலம்பல்
கொல்லி காவலன் மாலடி முடி மேல்
கோலமாம் குலசேகரன் சொன்ன
நல் இசை தமிழ் மாலை வல்லார்கள்
நண்ணுவார் ஒல்லை நாரணன் உலகே | பதவுரை Show / Hideமல்லை மா நகர்க்கு, Mallai Maa Nagarkku - செல்வம் நிரம்பிய பெரிய நகரமாகிய வட மதுரைக்கு இறையவன் தன்னை, Irayavan Thannai - தலைவனாயிருந்த கம்ஸனை வான் செலுத்தி, Vaan Seluththi - வீர ஸ்வர்க்கத்திற்கு அனுப்பி ஈங்கு வந்து அணை, Eengu Vandu Anai - (தேவகீ ஸமீபமாகிய) இங்கே வந்து சேர்ந்த பிள்ளை, Pillai - கண்ண பிரானுடைய மாயத்து எல்லை இல் செய்வன, Maayaththu Ellai Il Seivana - அற்புதத்தில் எல்லை யில்லாத சேஷடிதங்களை காணா, Kaanaa - (நடந்த போது) காணப் பெறாத தெய்வத் தேவகி, Deivath Devaki - தெய்வத் தன்மை பொருந்திய தேவகி யானவள் புலம்பிய புலம்பல், Pulambiya Pulambal - புலம்பிக் கொண்டு சொன்ன பாசுரங்களை கொல்லி காவலன், Kolli Kaavalan - கொல்லி நகர்க்கு அரசராய் மால் அடி முடி மேல் கோலம் ஆம், Maal Adi Mudi Mael Kolam Aam - ஸர்வேச்வரனுடைய திருவடிகளைத் தம் திருமுடிக்கு அலங்காரமாக வுடையரான குலசேகரன், Kulashekaran - குலசேகராழ்வார் சொன்ன, Sonna - அருளிச் செய்த நல் இசை தமிழ் மாலை, Nal Isai Tamil Maalai - நல்ல இசையையுடைய தமிழினாலாகிய சொல் மாலையை வல்லார்கள், Vallargal - ஓத வல்லவர்கள் ஒல்லை, Ollai - விரைவாக நாரணன் உலகு, Naaranan Ulagu - ஸ்ரீவைகுண்டத்தை நண்ணுவார், Nannuvaar - சேரப் பெறுவர் |