திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 719 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
719பெருமாள் திருமொழி || (மன்னு புகழ்) - கணபுரத்தொளிர் காகுத்தன் தாலாட்டு 1
மன்னு புகழ் கௌசலை தன் மணி வயிறு வாய்த்தவனே! தென் இலங்கை கோன் முடிகள் சிந்துவித்தாய்! செம்பொன் சேர் கன்னி நன் மா மதிள் புடை சூழ் கண புரத்து என் கரு மணியே! என்னுடைய இன் அமுதே! ராகவனே! தாலேலோ
பதவுரை Show / Hide
மன்னு புகழ், Mannu Pugazh - நிலை நின்ற புகழை யுடைய
கௌசலை தன், Kausalai Than - கௌஸல்யையினுடைய்
மணி வயிறு, Mani Vayiru - அழகிய வயிற்றிலே
வாய்த்தவனே, Vaiththavane - பிள்ளையாகத் திருவவதரித்தவனே!
தென் இலங்கை கோன், Then Ilangai Kon - தென்னிலங்கைக்கு இறைவனான ராவணனுடைய
முடிகள், Mudigal - பத்துத் தலைகளையும்
சிந்துவித்தாய், Sindhuviththai - சிதறப் பண்ணினவனே!
செம் பொன் சேர், Sem Pon Ser - செவ்விய பொன்னாலே செய்யப்பட்டதாய்
கன்னி, Kanni - அழிவில்லாததாய்
நல், Nal - விலக்ஷணமாய்
மா, Maa - பெரிதான
மதில், Madhil - திருமதிளாலே
புடை சூழ், Pudai Soozh - நாற் புறமும் சூழப்பட்ட
கணபுரத்து, Kanapurathu - திருக் கண்ணபுரத்தில் எழுந்தருளியிருக்கிற
என் கருமணியே, En Karumanie - நீல ரத்நம் போன்ற எம்பெருமானே!
என்னுடைய இன் அமுதே, Ennudaiya In Amudhe - எனக்கு போக்யமான அம்ருதமாயிருப்பவனே!
இராகவனே!, Irakavaney - ஸ்ரீராமனே!
தாலேலோ, Thaleloo - (உனக்குத்) தாலாட்டு
கணபுரம், Kanapuram - கண்ணபுரம் என்பதன் தொகுத்தல்,
தாலேலோ, Thaleloo - வளர்பிள்ளைத் தொட்டிலிலே வளர்த்திக் கண்வளரப் பண்ணுகைக்காகச் சீராட்டித் தாலாட்டுதல்;
தால், Thal - நாக்கு; தமிழில் தொண்ணாற்றாறு வகைப் பிரபந்தங்களுள் ஒன்றாகிய பிள்ளைத் தமிழில்