| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 72 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஐந்தாம் திருமொழி - உய்யவுலகு) (தலையைநிமிர்த்து முகத்தை அசைத்து ஆடுதல், செங்கீரைப்பருவம்) 9 | பாலொடுநெய்தயிர்ஒண்சாந்தொடுசண்பகமும் பங்கயம்நல்லகருப்பூரமும்நாறிவர கோலநறும்பவளச்செந்துவர்வாயினிடைக் கோமளவெள்ளிமுளைப்போல்சிலபல்லிலக நீலநிறத்தழகாரைம்படையின்நடுவே நின்கனிவாயமுதம்இற்றுமுறிந்துவிழ ஏலுமறைப்பொருளே. ஆடுகசெங்கீரை ஏழுலகும்முடையாய். ஆடுகஆடுகவே –1-5-9 | மறை,Marai - வேதத்தினுடைய ஏலும்,Ealum - தகுதியான பொருளே,Porule - அர்த்தமானவனே! பாலொடு,Paalodu - பாலோடே கூட நெய்,Ney - நெய்யும் தயிர்,Thayir - தயிரும் ஒண் சாந்தொடு,Onn saanthodu - அழகிய சந்தநமும் செண்பகமும்,Senbagamum - செண்பகம் முதலிய மலர்களும் பங்கயம்,Pangayam - தாமரைப் பூவும் நல்ல,Nalla - உத்தமமான கருப்பூரமும்,Karuppooramum - பச்சைக் கர்ப்பூரமுமாகிய இலை நாறி வர,Naari vara - கலந்து பரிமளிக்க கோலம்,Kolam - அழகிய நறு பவளம்,Naru pavalam - நற் பவளம் போல் செம்,Sem - அழகியதாய் துவர்,Thuvar - சிவந்திருக்கிற வாயின் இடை,Vaayin idai - திருவதரத்தினுள்ளே கோமளம்,Komalam - இளையதான வெள்ளி முளை போல்,Velli mulai pol - வெள்ளி முளை போலே சில பல்,Sila pal - சில திரு முத்துக்கள் இலக,Ilaga - விளங்க நீலம் நிறத்து,Neelam nirathu - நீல நிறத்தை யுடைத்தாய் அழகு ஆர்,Azhagu aar - அழகு நிறைந்திரா நின்ற ஐம்படையின் நடுவே,Aimbadaiyin naduve - பஞ்சாயுதத்தின் நடுவே நின்,Nin - உன்னுடைய கனி,Kani - கொவ்வைக் கனி போன்ற வாய்,Vaai - அதரத்தில் ஊறுகின்ற அமுதம்,Amudham - அம்ருத ஜலமானது இற்று முறிந்து விழ,Itru murinthu vizha - இற்றிற்று விழ ஆடுக-.,Aaduga - ஆடுக-. |