| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 720 | பெருமாள் திருமொழி || (மன்னு புகழ்) - கணபுரத்தொளிர் காகுத்தன் தாலாட்டு 2 | புண்டரீக மலர் அதன் மேல் புவனி எல்லாம் படைத்தவனே! திண் திற லாள் தாடகை தன் உரம் உருவ சிலை வளைத்தாய்! கண்டவர் தம் மனம் வழங்கும் கண புரத்து என் கருமணியே ! எண் திசையும் ஆள் உடையாய்! ராகவனே! தாலேலோ | புண்டரிகம் மலர் அதன் மேல், Pundarikam Malar Athan Mel - (திருநாபியில் அலர்ந்த) தாமரைப் பூவின் மேல் (பிரமனைத் தோற்றுவித்து அவன் முகமாக) புவனி எல்லாம் படைத்தவனே, Puvani Ellam Padaithavaney - உலகங்கள் எல்லாவற்றையும் ஸ்ருஷ்டித்தவனே! திண் திறலாள் தாடகை தன், Thin Thiralal Thadakai Than - த்ருடமான பலத்தை யுடையளான தாடகையினுடைய உரம் உருவ, Uram Uruva - மார்வைத் துளைக்கும் படியாக சிலை வளைத்தாய், Silai Valaiththai - வில்லை வளைத்து அம்புகளை எய்தவனே! கண்டவர், Kandavar - ஸேவித்தவர்கள் தம் மனம் வழங்கும், Tham Manam Vazhangu - தங்கள் மனத்தைத் தாங்களே இசைந்து கொடுப்பதற்குத் தகுந்த எண் திசையும், En Thisaiyum - எட்டுத் திக்கிலுள்ளவர்களையும் ஆள் உடையாய், Aal Udaiyaay - அடிமை கொண்டருளுபவனே! இராகவனே! தாலேலோ, Irakavane Thalelo - ஸ்ரீராமனே! (உனக்குத்) தாலாட்டு |