திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 721 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
721பெருமாள் திருமொழி || (மன்னு புகழ்) - கணபுரத்தொளிர் காகுத்தன் தாலாட்டு 3
கொங்கு மலி கரும் குழலாள் கௌசலை தன் குல முதலாய் ! தங்கு பெரும் புகழ் சனகன் திரு மருகா ! தாசரதீ ! கங்கையிலும் தீர்த்த மலி கண புரத்து என் கரு மணியே எங்கள் குலத்தின் இன் அமுதே !ராகவனே !தாலேலோ !
பதவுரை Show / Hide
கொங்குமலி கரு குழலாள், Kongumali Karu Kuzhalal - பரிமளம் மிகுந்த கறுத்த கூந்தலை யுடையளான
கௌசலை தன், Kausalai Than - கௌஸல்யையினுடைய
குலம் மதலாய், Kulam Mathalaiy - சிறந்த பிள்ளையானவனே!
தங்கு பெருபுகழ் சனகன், Thangu Perupugazh Sanakan - பொருந்திய மஹா கீர்த்தியை யுடைய ஜநக மஹாராஜனுக்கு
திரு மருகா, Thiru Maruga - மாப்பிள்ளை யானவனே!
தாசரதீ, Dasarathe - சக்ரவர்த்தி திருமகனே!
கங்கையிலும், Gangaiyilum - கங்கா நதியிற் காட்டிலும்
மலி தீர்த்தம், Mali Theertham - சிறப்பு மிக்க தீர்த்தங்களை யுடைய
கண புரத்து, Kanna Purathu - திருக் கண்ணபுரத்தி லெழுந்தருளி யிருக்கிற
எங்கள் குலம், Engal Kulam - எங்கள் ராஜ வம்சத்துக் கெல்லாம்
இன் அமுதே, In Amude - போக்யமான அமுதம் போன்றவனே!
எங்கள் குலத்து இன்னமுதே, Engal Kulaththu Innamude - ஸ்ரீராமன் ராஜவம்ஸத்திற் பிறந்தாற்போல