திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 724 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
724பெருமாள் திருமொழி || (மன்னு புகழ்) - கணபுரத்தொளிர் காகுத்தன் தாலாட்டு 6
சுற்றம் எல்லாம் பின் தொடர தொல் கானம் அடைந்தவனே! அற்றவர்கட்க்கு அரு மருந்தே! அயோத்தி நகர்க்கு அதிபதியே! கற்றவர்கள் தாம் வாழும் கண புரத்து என் கரு மணியே! சிற்றவை தன் சொல் கொண்ட சீ ராமா! தாலேலோ
பதவுரை Show / Hide
சுற்றம் எல்லாம் பின் தொடர, Sutram Ellam Pin Thodara - எல்லா உறவினரும் பின்னே தொடர்ந்து வர
தொல் கானம் அடைந்தவனே, Thol Kaanam Adaindavaney - புராதநமான தண்டகாரண்யத்துக் கெழுந்தருளினவனே!
அற்றவர்கட்கு, Attravarkadku - உனக்கே அற்றுத் தீர்ந்த பரம பக்தர்களுக்கு
அரு மருந்தே, Aru Marundhe - ஸம்ஸார ரோகத்தைத் (தணிக்க) அருமையான மருந்து போன்றவனே!
அயோத்தி நகர்க்கு அதிபதியே, Ayodhya Nagarkku Adhipathiye - அயோத்யா நகரத்திற்கு அரசனே!
கற்றவர்கள் தாம் வாழும் கணபுரத்து, Kattravargal Thaam Vaalum Kanapurathu - ஞானிகள் வாழ்தற்கு இடமான திருக்கண்ணபுரத்திலே எழுந்தருளியிருக்கிற
என் கருமணியே, En Karumanie - நீலமணி போலழகிய எம்பெருமானே!
சிற்றவை தன், Sitravai Than - சிறிய தாயாராகிய கைகேயியினுடைய
சொல் கொண்ட சீராமா, Sol Konda Seerama - சொல்லை ஏற்றுக்கொண்ட ஸ்ரீராமமே!
அது கேட்ட இராமபிரான், Adhu Ketta Irambiraan - “ஸீதே! நான் பிராணனை விட்டாலும் விடுவேன்; லக்ஷ்மணனையும் உன்னையும் விட்டாலும் விடுவேன்;