திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 725 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
725பெருமாள் திருமொழி || (மன்னு புகழ்) - கணபுரத்தொளிர் காகுத்தன் தாலாட்டு 7
ஆலின் இலை பாலகனாய் அன்று உலகம் உண்டவனே! வாலியை கொன்று அரசு இளைய வானரத்துக்கு அளித்தவனே! காலின் மணி கரை அலைக்கும் கண புரத்து என் கரு மணியே! ஆலி நகர்க்கு அதிபதியே! அயோத்தி மனே! தாலேலோ
பதவுரை Show / Hide
அன்று, Anru - முன்பு மஹாப்ரளயம் வந்த போது
ஆலின் இலை, Aalin Ilai - ஓர் ஆலந்தளிரிலே
பாலகன் ஆய், Paalagan Aayi - குழந்தை வடிவாய்க் கொண்டு
உலகம் உண்டவனே, Ulagam Undavaney - லோகங்களை யெல்லாம் திருவயிற்றில் வைத்து நோக்கினவனே!
வாலியை கொன்று, Vaalaiyai Konru - வாலியைக் கொலை செய்து
இளைய வானரத்துக்கு, Ilaiya Vaanarathukku - அவனது தம்பியான ஸுகரீவனுக்கு
அரசு அளித்தவனே, Arasu Alithavane - ராஜ்யத்தைக் கொடுத்தவனே!
காலில் மணி, Kaalil Mani - கால்வாய்களிலுள்ள ரத்நங்களை
கரை அலைக்கும், Karai Alaikkum - கரையிலே கொண்டு கொழிக்கப் பெற்ற
கண புரத்து, Kanna Purathu - திருக் கண்ணபுரத்தில் எழுந்தளி யிருக்கிற
ஆலி நகர்க்கு, Aali Nagarkku - திருவாலி திருநகரிக்கு
அதிபதியே, Adhipathiye - தலைவனே!
அயோத்திமனே, Ayothimane - அயோத்தி நகர்க்கு அரசனே!