திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 727 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
727பெருமாள் திருமொழி || (மன்னு புகழ்) - கணபுரத்தொளிர் காகுத்தன் தாலாட்டு 9
தளை அவிழும் நறும் குஞ்சி தயரதன் தன் குல முதலாய்! வளைய வொரு சிலை யதனால் மதிள் இலங்கை அழித்தவனே! களை கழுநீர் மருங்கலரும் கண புரத்து என் கரு மணியே! இளையவர்கட்க்கு அருள் உடையாய்! ராகவனே! தாலேலோ
பதவுரை Show / Hide
தளை அவிழும் நறு குஞ்சி, Thalai Avizhum Naru Kunji - கட்டு அவிழும்படியான நறுநாற்றமுடைய மயிர்முடியை யுடையனான
தயரதன் தன், Thayaradhan Than - தசரத சக்ரவாத்தியினுடைய
குலம் மதலாய், Kulam Mathalaiy - சிறந்த திருக்குமாரனே!
ஒரு சிலை வளைய, Oru Silai Valaiya - ஒப்பற்ற வில்லானது வளைய
அதனால், Adhanal - அந்த வில்லாலே
களை கழுநீர், Kalai Kazhunir - களையாகப் பறிக்கப்பட்ட செங்கழுநீர்கள்
மருங்கு அலரும் கணபுரத்து, Marungu Alarum Kanapurathu - சுற்றிலும் மலரப் பெற்ற திருக்கண்ணபுரத்தி லெழுந்தருளியிருக்கிற
இளையவர்கட்கு, Ilaiyavarkadku - இளையவர்கள் விஷயத்திலே
அருள் உடையாய், Arul Udaiyai - கருணை பொருந்தியவனே!