திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 728 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
728பெருமாள் திருமொழி || (மன்னு புகழ்) - கணபுரத்தொளிர் காகுத்தன் தாலாட்டு 10
தேவரையும் அசுரரையும் திசைகளையும் படைத்தவனே! யாவரும் வந்து அடி வணங்க அரங்க நகர் துயின்றவனே! காவிரி நல் நதி பாயும் கண புரத்து என் கரு மணியே! ஏவரி வெஞ்சிலை வலவா! ராகவனே! தாலேலோ
பதவுரை Show / Hide
தேவரையும், Devaraiyum - தேவர்களையும்
அசுரரையும், Asuraraiyum - அஸுரர்களையும்
திசைகளையும், Thisaigalaiyum - திக்குக்களையும் (அதாவது எல்லா ப்ரதேசங்களையும்)
படைத்தவனே, Padaithavaney - ஸ்ருஷ்டித்தவனே
யாவரும் வந்து அடி வணங்க, Yavarum Vandu Adi Vananga - ஸகல சேதநரும் வந்து திருவடிகளில் ஸேவிக்கும்படியாக
அரங்கம் நகர், Arangam Nagar - ஸ்ரீரங்கத்திலே
துயின்றவனே, Thuyinravane - பள்ளி கொண்டிருப்பவனே!
காவிரி நல் நதி, Kaviri Nal Nathi - காவேரி யென்கிற சிறந்த நதி யானது
பாயும், Payum - ப்ரவஹிக்கப் பெற்ற
கண புரத்து, Kanna Purathu - திருக் கண்ணபுரத்தில் எழுந்தருளி யிருக்கிற
ஏ வரி வெம் சிலை வலவா, E Vari Vem Silai Valavaa - அம்புகள் தொடுக்கப்பெற்று அழகியதாய் (ச் சத்துருக்களுக்கு)க் கொடிதா யிருந்துள்ள வில்லை ஆள வல்லவனே