| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 73 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஐந்தாம் திருமொழி - உய்யவுலகு) (தலையைநிமிர்த்து முகத்தை அசைத்து ஆடுதல், செங்கீரைப்பருவம்) 10 | செங்கமலக்கழலில்சிற்றிதழ்போல்விரலில் சேர்திகழாழிகளும்கிண்கிணியும் அரையில் தங்கியபொன்வடமும்தாளநன்மாதுளையின் பூவொடுபொன்மணியும்மோதிரமும்கிறியும் மங்கலஐம்படையும்தோல்வளையும்குழையும் மகரமும்வாளிகளும்சுட்டியும்ஒத்திலக எங்கள்குடிக்கரசே. ஆடுகசெங்கீரை ஏழுலகும்முடையாய். ஆடுகஆடுகவே. –1-5-10 | எங்கள் குடிக்கு,Engal kudikku - எங்கள் வம்சத்துக்கு அரசே,Arase - ராஜாவானவனே! செம் கமலம்,Sem kamalam - செந்தாமரைப் பூப் போன்ற கழலில்,Kalazhil - திருவடிகளில் சிறு இதழ் போல்,Siru idhazh pol - (அந்தப் பூவினுடைய) உள்ளிதழ் போலே சிறுத்திருக்கிற விரலில்,Viralil - திரு விரல்களில் சேர் திகழ்,Ser thigal - சேர்ந்து விளங்கா நின்ற ஆழிகளும்,Aazhilgalum - திருவாழி மோதிரங்களும் கிண் கிணியும்,Kin kiniyum - சதங்கைகளும் அரையில் தங்கிய,Araiyil thangiya - அரையில் சாத்தி யிருந்த பொன் வடமும்,Pon vadamum - பொன் அரை நாணும் (பொன்) தாள,Pon thaal - பொன்னால் செய்த காம்பையுடைய நல்,Nal - நல்லதான மாதுளையின் பூவொடு,Mathulaiyin poovodu - மாதுளம் பூக் கோவையும் பொன் மணியும்,Pon maniyum - (நடு நடுவே கலந்து கோத்த) பொன் மணிக் கோவையும் மோதிரமும்,Mothiramum - திருக்கை மோதிரங்களும் சிறியும்,Siriyum - (மணிக் கட்டில் சாத்தின) சிறுப் பவள வடமும் மங்கலம்,Mangalam - மங்களாவஹமான ஐம்படையும்,Aimpadaiyum - பஞ்சாயுதமும் தோள் வளையும்,Thol valaiyum - திருத் தோள் வளைகளும் குழையும்,Kuzhaiyum - காதணிகளும் மகரமும்,Magaramum - மகர குண்டலங்களும் வாளிகளும்,Vaaligalum - (திருச் செவி மடல் மேல் சாத்தின) வாளிகளும் சுட்டியும்,Suttiyum - திரு நெற்றிச் சுட்டியும் ஒத்து,Othu - அமைந்து இலக,Ilaga - விளங்கும்படி ஆடுக. ஆடுக.,Aaduga aaduga - ஆடுக. . . ஆடுக. |