| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 730 | பெருமாள் திருமொழி || (வன் தாள் இணை) - தனயன் கான் புகத் தசரதன் புலம்பல் 1 | வன் தாள் இணை வணங்கி வள நகரம் தொழுது ஏத்த மன்னனாவான் நின்றாயை அரி அணை மேல் இருந்தாயை நெடும் கானம் படர போகு வென்றாள் எம்மி ராமாவோ! உன்னை பயந்த கைகேசி தன் சொல் கேட்டு நன்றாக நானிலத்தை ஆள்வித்தேன் நன் மகனே! உன்னை நானே | எம் இராமாவோ, Em Iraamavo - ஓ எமது இராமனே! வளம் நகரம், Valam Nagaram - அழகிய அயோத்தி மாநகரத்துப் பிரஜைகள் அனைவரும் வல் தாளின் இணை வணங்கி தொழுது ஏத்த, Val Thaalin Inai Vanangi Thozhudhu Aetha - (சரணமடைந்தவர்களை எப்பொழுதும் விடாமற் பாதுகாக்கும்) மன்னன் ஆவான் நின்றாயை, Mannan Aavaan Nindraaiyai - அரசனாகப் பட்டாபிஷேகஞ் செய்து கொள்ளுதற்கு ஸித்தனாய் நின்றவனும் அரி அணை மேல் இருந்தாயை, Ari Anai Mel Irundhaaiyai - சிங்காசனத்தின் மீது வீற்றிருக்க ஸித்தனாயிருந்தவனுமான உன்னை நெடுங்கானம் படர போகு என்றாள், Nedungaanam Padara Pogu Endraal - பெரிய காட்டிற்கு செல்லுதற்கு (இந்நகர் விட்டு நீங்கிப்) போ என்று (கைகேயி) கூறினாள் நல் மகனே, Nal Maganae - நல்ல குமாரனே! நான், Naan - நான் உனை பயந்த கைகேசி தன் சொல் கேட்டு, Unai Bayandha Kaikesi Than Sol Kaettu - உன்னைப் பெற்று வளர்த்த தாயான கைகேயியின் வார்த்தையைக் கேட்டு நன்றாக உன்னை நானிலத்தை ஆள்வித்தேன், Nandraaga Unnai Naanilaththai Aalviththen - நன்றாக! உன்னை நிலவுலகத்தை ஆளும்படி செய்தேன். போகு, Pogu - என்றாள் = போகென்றாள் என்று புணரத்தக்கது, இராமாவோ, Iraamavo - ஒகாரம் மிக்கது, புலம்பல் விளியாகலின் புலம்பின் ஓவும் ஆகும் என்றார். |