திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 737 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
737பெருமாள் திருமொழி || (வன் தாள் இணை) - தனயன் கான் புகத் தசரதன் புலம்பல் 8
பொன் பெற்றார் எழில் வேத புதல்வனையும் தம்பியையும் பூவை போலும் மின் பற்றா நுண் மருங்குல் மெல்லியல் என் மருகியையும் வனத்தில் போக்கி நின் பற்றா நின் மகன் மேல் பழி விளைத்திட்டு என்னையும் நீள் வானில் போக்க என் பெற்றாய்? கைகேசி! இரு நிலத்தில் இனிதாக இருக்கின்றாயே
பதவுரை Show / Hide
கைகேசீ, Kaikeesi - கைகேயியே
பொன் பெற்றார் எழில் வேதம் புதல்வனையும், Pon Pettraar Ezhil Vedham Puthalvanaiyum - கல்விச் செல்வத்தைப் பெற்றவர்களான உபாத்தியாயரின்
தம்பியையும், Thambiyaiyum - (அவனது) தம்பியான லக்ஷ்மணனையும்
பூவை போலும், Poovai Polum - (பேச்சின் இனிமையிற் கொஞ்சுகிற) கிளி போன்றவளும்
மின் பற்றா நுண் மருங்குல் மெல் இயல்என் மருகியையும், Min Patraa Nun Marungul Mel Iyalen Marugiyaiyum - மின்னலும் ஈடாகமாட்டாத நுண்ணிய இடையையும்
வனத்தில் போக்கி, Vanathil Pookki - காட்டுக்குப் போகச்செய்து
நின் பற்று ஆம் நின் மகன் மேல் பழி விளைத்திட்டு, Nin Pattru Aam Nin Magan Mel Pazhi Vilaittittu - உனது அன்புக்கு இடமான உன் மகனான பரதன்
என்னையும் நீள் வானில் போக்க, Ennaiyum Neel Vaanil Pookka - (புத்ர விரஹத்தால்) என்னையும் தூரத்திலுள்ள மேலுலகத்திற்குச் செலுத்துதலினால்
என் பெற்றாய், En Pettraai - நீ என்ன பயனடைந்தாய்!
இரு நிலத்தில், Iru Nilathil - பெரிய இவ்வுலகத்தில்
இனிது ஆக, Inidhu Aaga - சுகமாக
இருக்கின்றாயே, Irukkindraaye - வாழ்கின்றாயே
மருகி, Marugi - மகன் மனைவி (இதன் ஆண்பால்-மருகன்) என் பெற்றாய் = இவ்வளவு கொடுமைகளை ஒருங்கே செய்தற்கு