| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 74 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஐந்தாம் திருமொழி - உய்யவுலகு) (தலையைநிமிர்த்து முகத்தை அசைத்து ஆடுதல், செங்கீரைப்பருவம்) 11 | அன்னமும்மீனுருவும்ஆளரியும்குறளும் ஆமையுமானவனே. ஆயர்கள்நாயகனே. என்அவலம்களைவாய். ஆடுகசெங்கீரை ஏழுலகும்முடையாய். ஆடுகவாடுகவென்று அன்னநடைமடவாள்அசோதையுகந்தபரிசு ஆனபுகழ்ப்புதுவைப்பட்டனுரைத்ததமிழ் இன்னிசைமாலைகள்இப்பத்தும்வல்லார் உலகில் எண்திசையும்புகழ்மிக்குஇன்பமதெய்துவரே. –1-5-11 | அன்னமும்,annamum - ஹம்ஸ ரூபியாயும் மீன் உருவும்,meen uruvum - மத்ஸ்ய ரூபியாயும் ஆள் அரியும்,aal ariyum - நர ஸிம்ஹ ரூபியாயும் குறளும்,kuRalum - வாமந ரூபியாயும் ஆமையும்,aamaiyum - கூர்ம ரூபியாயும் ஆனவனே,aanavane - அவதரித்தவனே! ஆயர்கள்,aayargal - இடையர்களுக்கு நாயகனே,naayakane - தலைவனானவனே! என் அவலம்,en avalam - என் துன்பத்தை களைவாய்,kaLaiyaai - நீக்கினவனே! செங்கீரை ஆடுக,senkeerai aaduga - செங்கீரை ஆட வேணும் ஏழ் உலகும்,ezh ulagum - ஸப்த லோகங்களுக்கும் உடையாய்,udaiyaai - ஸ்வாமி யானவனே! ஆடுக ஆடுக என்று,aaduga aaduga enRu - பலகாலுமாடவேணும் என்று அன்னம் நடை,annam nadai - ஹம்ஸ கதியை யுடையனாய் மடவாள்,maDavaal - நற்குணமுடையளான அசோதை,asodhai - யசோதைப் பிராட்டியாலே உகந்த,ugandha - உகந்த சொல்லப் பட்ட பரிசு,parisu - ப்ரகாரத்தை ஆன,aana - பொருந்திய புகழ்,pugazh - புகழை யுடையரான புதுவை பட்டன்,puduvai paTTan - பெரியாழ்வார் உரைத்த,uraittha - அருளிச் செய்த இன் இசை,in isai - இனிய இசையை யுடைய தமிழ் மாலைகள்,thamizh maalaigal - தமிழ்த் தொடைகளான இ பத்து,i paththu - இப் பத்துப் பாசுரங்களையும் வல்லார்,vallaar - ஓத வல்லவர்கள் உலகில்,ulakil - இந்த லோகத்தில் எண் திசையும்,eN thisaikum - எட்டுத் திசைகளிலும் (பரந்த) புகழ்,pugazh - கீர்த்தியையும் மிகு இன்பமது,migu inbamathu - மிக்க இன்பத்தையும் எய்துவர்,eydhuththavar - பெறுவார்கள். |