திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 740 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
740பெருமாள் திருமொழி || (வன் தாள் இணை) - தனயன் கான் புகத் தசரதன் புலம்பல் 11
ஏரார்ந்த கரு நெடுமால் ராமனாய் வனம் புக்க வதனுக்கு ஆற்றா தாரர்ந்த தடவரை தோள் தயரதன் தான் புலம்பிய அப் புலம்பல் தன்னை கூரார்ந்த வேல் வலவன் கோழியூர் கோன் குடை குலசேகரன் சொல் செய்த சீரார்ந்த தமிழ் மாலை இவை வல்லார் தீ நெறி கண் செல்லார் தாமே
பதவுரை Show / Hide
ஏர் ஆர்ந்த, Aer Aarntha - அழகு நிறைந்த
கரு, Karuthu - கரு நிறமுடைய
நெடுமால், Nedumaal - மஹா விஷ்ணு
இராமன் ஆய், Iraman Aayi - ஸ்ரீ ராமனாகத் திருவவதரித்து
வனம் புக்க, Vanam Pukka - காட்டுக்குச் சென்றதான
அதனுக்கு, Adhanukku - அச் செயலை
ஆற்றா, Aartra - பொறுக்க மாட்டாமல்
தார் ஆர்ந்த தட வரை தோள் தயரதன் புலம்பிய, Thaar Aarntha Thada Varai Thol Thayaratthan Pulampiya - வெற்றி மாலை பொருந்திய பெரிய மாலை போன்ற
அப் புலம்பல் தன்னை, Ap Pulampal Thannai - அக் கதறல்களை,
கூர் ஆர்ந்த, Koora Aarntha - கூர்மை மிக்க
வேல் வலவன், Vel Valavan - வேற்படையின் தொழிலில் வல்லவரும
கோழியர் கோன், Kozhiyar Kon - உறையூரிலுள்ளார்க்குத் தலைவரும்
குடை, Kudai - கொற்றக்குடையை உடையவருமான
குலசேகரன், Kulashekaran - குலசேகராழ்வார்
சொல் செய்த, Sol Seitha - அருளிச் செய்த
சீர் ஆர்ந்த, Seer Aarntha - சிறப்பு மிக்க
தமிழ் மாலை இவை, Tamil Maalai Ivai - தமிழ்ப் பிரபந்தரூபமான இப் பத்துப் பாசுரங்களையும்
வல்லார், Vallaar - கற்க வல்லவர்கள்
தீ நெறிக்கண், Thee Nerikkan - கொடிய வழி யொன்றிலும்
செல்லார், Sellaar - சென்று சேர மாட்டார்கள். (தான், தாம்–அசைகள்)