திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 748 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
748பெருமாள் திருமொழி || (அம் கண் நெடு மதிள்)- தில்லைநகர் திருச்சித்திர கூடத்தில் தொல்லிராமனாய்த் தோன்றிய கதைமுறை 8
அம் பொன் நெடு மணி மாட அயோத்தி எய்தி அரசு எய்தி அகத்தியன் வாய் தான் முன் கொன்றான் தன் பெரும் தொல் கதை கேட்டு மிதிலை செல்வி உலகு உய்யத் திரு வயிறு வாய்த்த மக்கள் செம் பவள திறல் வாய் தன் சரிதை கேட்டான் தில்லை நகர் சித்ர கூடம் தன்னுள் எம்பெருமான் தான் சரிதை செவியால் கண்ணால் பருகுவோம் இன் அமுதம் மதியோம் அன்றே
பதவுரை Show / Hide
அம் நெடு பொன் மணி மாடம், Am Nedhu Pon Mani Maadam - அழகிய உயர்ந்த பொன்னையும் இரத்தினங்களையுங் கொண்டு
அயோத்தி, Ayodhya - அயோத்யா நகரத்துக்கு
எய்தி, Eythi - மீண்டு வந்து
அரசு எய்தி, Arasu Eythi - அரசாட்சியை அடைந்து
தான் முன் கொன்றான் தன், Thaan Mun Konraan Than - தன்னால் முன்பு கொல்லப்பட்டவனான இராவணனுடைய
பெரு தொல் கதை, Peru Thol Kadhai - பெரிய பூர்வ வ்ருத்தாந்தங்களை யெல்லாம்
அகத்தியன் வாய் கேட்டு, Akathiyan Vaai Kaettu - அகஸ்திய மகாமுனிவன் வாயாற் சொல்லக் கேட்டு
மிதிலை செல்வி, Mithilai Selvi - மிதிலா நகரத்தில் தோன்றிய பிராட்டி
உலகு உய்ய, Ulaku Uyya - உலக முழுவதும் வாழும்படி
திரு வயிறு வாய்த்த, Thiru Vayiru Vaayththa - பெற்ற
மக்கள், Makkal - தன் பிள்ளைகளான குசலவர்களுடைய
செம் பவளம் திரள் வாய், Sem Pavalam Thiral Vaai - சிவந்த பவழத்துண்டு போன்ற வாயினால்
தன் சரிதை, Than Sarithai - தனது சரித்திரமான ஸ்ரீராமாயணத்தை
கேட்டான், Kaettaan - கேட்டருளினவனான (எழுந்தருளியிருக்கிற)
எம் பெருமான் தன், Em Perumaan Than - எமது தலைவனுடைய
சரிதை, Sarithai - சரித்திரத்தை
செவியால் கண்ணால், பருகுவோம், Seviyal Kannal Paruguvom - காதினாற்கேட்டு (அப்பெருமானைக்) கண்ணால் ஸேவிக்கப் பெறுவோம்யாம் (அதுவேயன்றி)
இன் அமுதம், In Amudham - இனிய தேவாம்ருதத்தையும்
மதியோம், Madhiyom - ஒரு பொருளாக நன்கு மதிக்க மாட்டோம்
அன்றே, Andrae - அல்லவா! (ஈற்றசை, தோற்றமுமாம்)
அமுதம், Amudham - அமுதத்தை, ஒன்று – ஒரு பொருளாக மதியோம் என்றவாறு.