திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 75 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
75பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஆறாம் திருமொழி - மாணிக்கக்கிண்கிணி) (கைகொட்டி விளையாடுதல் : சப்பாணிப்பருவம்) 1
மாணிக்கக் கிண்கிணி யார்ப்ப மருங்கின் மேல் ஆணிப் பொன் னால் செய்த ஆய் பொன்னுடை மணி பேணிப் பவள வாய் முத்திலங்க பண்டு காணி கொண்ட கைகளால் சப்பாணி கருங்குழல் குட்டனே சப்பாணி–1-6-1
பதவுரை Show / Hide
ஆணிப் பொன்னால் செய்த,Aanip Ponnal Seytha - மாற்றுயர்ந்த பொன்னால் செய்த
ஆய்,Aay - (வேலைப் பாட்டிற் குறைவில்லாதபடி) ஆராய்ந்து செய்த
பொன் மணி,Pon Mani - பொன் மணிக் கோவையை
உடைய,Udaiya - உடைய
மருங்கின் மேல்,Marungin Mel - இடுப்பின் மேலே
மாணிக்கம் கிண்கிணி,Manikkam Kinkini - (உள்ளே) மாணிக்கத்தை யிட்ட அரைச் சதங்கை
ஆர்ப்ப,Aarppa - ஒலி செய்யவும்
பவளம்,Pavalam - பவழம் போன்ற
வாய்,Vaai - வாயிலே
முத்து,Muthu - முத்துப் போன்ற பற்கள்
இலங்க,Ilanga - விளங்கவும்
பண்டு,Pandu - முற்காலத்திலேயே
காணி,Kaani - பூமியை
கொண்ட,Konda - (புவிச் சக்ரவர்த்தியினிடத்தில் நின்றும்) வாங்கிக் கொண்ட
கைகளால்,Kaigalal - திருக் கைகளாலே
பேணி,Peni - விரும்பி
சப்பாணி,Sappani - சப்பாணி கொட்டி யருள வேணும்;
கரு,Karu - கரு நிறமான
குழல்,Kuzhal - கூந்தலை யுடைய
குட்டனே,Kuttane - பிள்ளாய்!
சப்பாணி,Sappani - சப்பாணி கொட்டியருள வேணும்.