| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 75 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஆறாம் திருமொழி - மாணிக்கக்கிண்கிணி) (கைகொட்டி விளையாடுதல் : சப்பாணிப்பருவம்) 1 | மாணிக்கக் கிண்கிணி யார்ப்ப மருங்கின் மேல் ஆணிப் பொன் னால் செய்த ஆய் பொன்னுடை மணி பேணிப் பவள வாய் முத்திலங்க பண்டு காணி கொண்ட கைகளால் சப்பாணி கருங்குழல் குட்டனே சப்பாணி–1-6-1 | ஆணிப் பொன்னால் செய்த,Aanip Ponnal Seytha - மாற்றுயர்ந்த பொன்னால் செய்த ஆய்,Aay - (வேலைப் பாட்டிற் குறைவில்லாதபடி) ஆராய்ந்து செய்த பொன் மணி,Pon Mani - பொன் மணிக் கோவையை உடைய,Udaiya - உடைய மருங்கின் மேல்,Marungin Mel - இடுப்பின் மேலே மாணிக்கம் கிண்கிணி,Manikkam Kinkini - (உள்ளே) மாணிக்கத்தை யிட்ட அரைச் சதங்கை ஆர்ப்ப,Aarppa - ஒலி செய்யவும் பவளம்,Pavalam - பவழம் போன்ற வாய்,Vaai - வாயிலே முத்து,Muthu - முத்துப் போன்ற பற்கள் இலங்க,Ilanga - விளங்கவும் பண்டு,Pandu - முற்காலத்திலேயே காணி,Kaani - பூமியை கொண்ட,Konda - (புவிச் சக்ரவர்த்தியினிடத்தில் நின்றும்) வாங்கிக் கொண்ட கைகளால்,Kaigalal - திருக் கைகளாலே பேணி,Peni - விரும்பி சப்பாணி,Sappani - சப்பாணி கொட்டி யருள வேணும்; கரு,Karu - கரு நிறமான குழல்,Kuzhal - கூந்தலை யுடைய குட்டனே,Kuttane - பிள்ளாய்! சப்பாணி,Sappani - சப்பாணி கொட்டியருள வேணும். |