| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 752 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 1 | பூநிலாய ஐந்துமாய் புனல் கண் நின்ற நான்குமாய் தீநிலாய மூன்றுமாய் சிறந்த கால் இரண்டுமாய் மீநிலாய தொன்றுமாகி வேறு வேறு தன்மையாய் நீநிலாய வண்ண நின்னை யார் நினைக்க வல்லீரே | பூநிலாய ஐந்துமாய், Poonilaaya Aindhumai - பூமியில் தங்கி இருக்கிற சப்தாதி -சப்த ஸ்பர்ச ரூப ரச கந்தங்கள்-ஐந்து குணங்களுக்கும் நிர்வாஹகனாய் புனல் கண் நின்ற நான்குமாய், Punal Kan Nindra Naangumai - நீரிலே உள்ள -சப்த ஸ்பர்ச ரூப ரசங்கள்-நான்கு குணங்களுக்கும் நிர்வாஹகனாய் தீநிலாய மூன்றுமாய், Theenilaaya Moondrumai - தேஜஸ்ஸிலே உள்ள -சப்த ஸ்பர்ச ரூப-மூன்று குணங்களுக்கும் நிர்வாஹகனாய் சிறந்த கால் இரண்டுமாய், Sirandha Kaal Irandumai - சர்வ பிராணிகளுக்கும் ஜீவன ஹேது வாகையாலே ஸ்ரேஷ்டமான வாயுவில் உள்ள சப்த ஸ்பர்சங்கள் இரண்டு குணங்களுக்கும் நிர்வாஹகனாய் மீநிலாய தொன்றுமாகி, Meenilaaya Thondrumagi - ஆகாசத்தில் உள்ள சப்த குணம் ஒன்றுக்கும் நிர்வாஹகனாய் வேறு வேறு தன்மையாய், Veeru Veeru Thanmaiyaai - பரஸ்பரம் விலக்ஷணமான தேவாதி பதார்த்தங்களும் அந்தராத்மாவாய் நீநிலாய வண்ண, Neenilaaya Vanna - கார்ய காரண வர்க்கத்தில் நிற்கும் பிரகாரத்தை உடையனாய்-நீ நிற்கிற படியையும் நின்னை, Ninnai - சித் அசித் விசிஷ்டமாய் கொண்டு ஜகத் உபாதான காரணமாய் நிற்கிற உன்னையும் யார் நினைக்க வல்லீரே, Yaar Ninaikka Valliire - ஸூவ ப்ராயத்தினால் யார் தான் சிந்தித்து அறியக் கடவர் |