| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 754 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 3 | ஐந்தும் ஐந்தும் ஐந்துமாகி அல்லவற்றுள் ஆயமாய் ஐந்தும் மூன்றும் ஒன்றுமாகி நின்ற வாதி தேவனே ஐந்தும் ஐந்தும் ஐந்துமாகி யந்தரத்து யணைந்து நின்று ஐந்தும் ஐந்துமாய நின்னை யாவர் காண வல்லரே | ஐந்தும், Aindhum - ஆகாசாதி பூதங்கள் ஐந்தும் ஐந்தும், Aindhum - ஜ்ஞாநேந்திரியங்கள் ஐந்தும் ஐந்தும், Aindhum - கருமேந்திரியங்கள் ஐந்தும் ஐந்தும், Aindhum - தந்மாத்ரைகள் ஐந்தும் மூன்றும், Moondrum - ப்ரக்ருதி, மஹாந், அஹங்காரம் என்ற மூன்றும் ஒன்றும், Ondrum - மநஸ்ஸாகிய ஒன்றும் ஆகி, Aagi - (ஆக இப்படிப்பட்ட இருபத்தினாலு தத்துவங்கட்கு) நிர்வாஹகனாய் அல்ல வற்றுளாயும் ஆய் நின்ற, Alla Vattrulayaum Aay Nindra - கீழ்ச்சொல்லப்பட்ட அசித்துப் போலன்றியே சேதநராயுள்ளவர்கட்கும் அந்தர்யாமியாய் எழுந்தருளியிருக்கிற ஆதிதேவனே!, Aadhithevaney - முழு முதற்கடவுளே! அந்தரத்து அணைந்து! நின்று, Andharathu Anaindhu Nindru - பரமபதத்திலே பொருந்தி நின்று ஐந்தும் ஐந்தும் ஐந்தும் ஆகி, Aindhum Aindhum Aindhum Aagi - அப்ராக்ருத பஞ்சசக்திகளுக்கும் ஜ்ஞாநேதிரியங்களைந்துக்கும், கருமேந்திரியங்களைந்துக்கும் நிர்வாஹகனாய் ஐந்தும் ஐந்தும் ஆய நின்னை, Aindhum Aindhum Aay Ninnai - சப்தாதிபோக்யங்களைந்துமாய், போகஸ்தாகம், போகோபகரணம், வைகுந்தத்தமர் முனிவர் முக்தர் என்ற ஐந்து வகுப்புகட்கு நியாமகனுமா யெழுந்தருளியிருக்கிற உன்னை. யாவர் காண வல்லர், Yaavar Kaan Vallar - யார் அறியவல்லர்? (யாருமறியகில்லார்.) |