| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 757 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 6 | நாகம் ஏந்து மேரு வெற்பை நாகம் ஏந்து மண்ணினை நாகம் ஏந்து மாகம் மாகம் ஏந்து வார் புனல் மாகம் ஏந்து மங்குல் தீ ஓர் வாயு ஐந்து அமைந்து காத்து ஏகம் ஏந்தி நின்ற நீர்மை நின் கணேயியன்றதே | நாகம் ஏந்தும் ஆக, Naagam Aendhum Aaga - திரு அனந்தவாழ்வானாலே தரிக்கப் பட்ட திருமேனியை யுடைய எம்பெருமானே நாகம் ஏந்து மேரு வெற்பை, Naagam Aendu Meru Verpai - ஸ்வர்க்க லோகத்தை தரிக்கிற மேரு பர்வதத்தையும் நாகம் ஏந்து மண்ணினை, Naagam Aendu Manninai - திருவனந்தாழ்வான்-அல்லது திக்கஜங்களால் தரிக்கப்பட்ட பூமியையும் நாகம், Naagam - சர்ப்பத்துக்கும் யானைக்கும் – மாகம், Maakham - பரம பதத்தையும் மாகம் ஏந்து வார் புனல், Maakham Aendu Vaar Punal - ஆகாசத்தால் தரிக்கப்பட்ட கங்கையையும் மாகம் ஏந்து மங்குல், Maakham Aendu Mangul - ஆகாசத்தால் தரிக்கப்பட்ட மேக மண்டலத்தையும் தீ ஓர், Thee Oru - ஓர் தீ -வைச்வானர அக்னியையும் வாயு ஐந்து, Vaayu Ainthu - பஞ்ச வ்ருத்தி பிராணங்களையும் அமைந்து காத்து, Amaindhu Kaathu - பொருந்தி ரஷித்து அருளி ஏகம் ஏந்தி நின்ற நீர்மை, Egam Aendi Nindra Neermai - எல்லாவற்றையும் ஒரு வஸ்துவே தரித்துக் கொண்டு நிற்கிறது என்று நின் கணேயியன்றதே, Nin Kaneyiyandrathe - உன்னிடத்தில் தான் இருக்கின்றது – முதலடியின் முதலிலுள்ள நாகம், Muthaladiyin Muthalilulla Naagam - நாசா” என்ற வடசொல்லிகாரம். ***- ***- என்பது ச்ருதி. அதற்கு மேல் நாகம், Adharku Mel Naagam - நாஹா என்ற வடசொல் விகாரம். அந்த பதத்திற்கு ஸர்ப்பமென்றும், யானையென்றும் இரண்டு பொருள்களுண்டு . இரண்டு பொருளும் இங்கு ஏற்கும். பூமியானது ஆதிசேஷனாலும், திக்கஜங்களாலும் தாங்கப்படுவதால். இரண்டாவடியிலுள்ள நாகமும், Bhoomiyanathu Aadhiseshanalum Thikkajangalalum Thaangappaduvadhal Irandavadiyilulla Naagamum - நாஹா என்ற வடசொல் விகரம் (“நாகமேந்துமாகன்” என்பதன் அண்மைவிளி.) முதல் மாகம், Muthal Maakham - பரமாகாசவாசகம். இரண்டாவது மாகம், Irandavathu Maakham - ப்ரஸித்தாகாசவாசகம். மூன்றாமடியிலுள்ள மாகமும், Moondramadiyilulla Maakamum - ஹோவா. என்ற வடசொல் விகாரமே. ஏகமேந்தி நின்ற நீர்மை, Egam Aendi Nindra Neermai - “***- ***- ” என்றிவை முலான வேதாந்த வாக்கியங்களில் ஓதப்பட்டுள்ள அர்த்தம் உன் பக்கலில்தான் பொருந்தியிரா நின்றதென்றபடி. ஏகம், Egam - வன்கம். நின் கண்= கண், Nin Kan Kan - எழலுருபு. |