| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 770 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 19 | புள்ளதாகி வேத நான்கும் ஓதினாய் அதன்றியும் புள்ளின் வாய் பிளந்து புட் கொடி பிடித்த பின்னரும் புள்ளை ஊர்தி யாதலால் என் கொல் மின் கொள் நேமியாய் புள்ளின் மெய்ப் பகைக் கடல் கிடத்தாழ் காதலித்ததே | மின்கொள் நேதமியாய், Minkol Nethamiyai - தேஜஸ்வியாய் விளங்காநின்றுள்ள திருவாழியையுடைய பெருமானே! புள் அது ஆகி, Pul Athu Aagi - ஹம்ஸரூபியாய் அவதரித்து வேதம் நான்கும், Vedham Nankum - நான்கு வேதங்களையும் ஓதினாய், Othinai - உபதேசித்தருளினாய், அது அன்றியும், Adhu Anriyum - அதுவுமல்லாமல், புள்ளின் வாய் பிளந்து, Pullin Vaai Pilandhu - (உன்னை விழுங்குவதாக வாயைத் திறந்துகொண்டு வந்த) பகாஸுரனுடைய வாயைக் கிழித்து (அவனை முடித்து விட்டு) புள்கொடி பிடித்த பின்னரும், Pul Kodi Piditha Pinnarum - பெரிய திருவடியை த்வஜமாகப் பிடித்ததுமல்லாமல் புள்ளை, Pullai - அப்பெரிய திருவடியை ஊர்தி, Oorthi - வரஹநமாகக்கொண்டு செல்லா நின்றாய் ஆதலால், Aadhalal - இப்படி பலவகையான ரக்ஷணோபாயங்களைச் செய்தருளா நிற்கச் செய்தேயும் கடல், Kadal - திருப்பாற்கடலிலே புள்ளின் பகை மெய், Pullin Pagai Mey - கருடஜாதிக்குப் பகையென்று தோற்றும்படியான திருவளர் தாழ்வானுடைய திருமேனியிலே கிடத்தல், Kidaththal - பள்ளிகொள்வதை காதலித்தது, Kaadhaliththathu - விரும்பிப்போவதாகிய என்கொல், Enkol - என்ன திருவுள்ளத்தாலே? |