Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 78 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
78ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஆறாம் திருமொழி - மாணிக்கக்கிண்கிணி) (கைகொட்டி விளையாடுதல் : சப்பாணிப்பருவம்) 4
தூ நிலா முற்றத்தே போந்து விளையாட
வானிலா அம்புலீ சந்திரா வா வென்று
நீநிலா நின் புகழா நின்ற ஆயர் தம்
கோ நிலாவக் கொட்டாய் சப்பாணி குடந்தைக் கிடந்தானே சப்பாணி–1-6-4
வான்,Vaan - ஆகாசத்திலே
நிலா,Nila - விளங்குகின்ற
அம்புலி,Ambuli - அம்புலியே!
சந்திரா,Chandira - சந்திரனே!
தூ,Thoo - வெண்மையான
நிலா,Nila - நிலாவையுடைய
முற்றத்தே,Mutraththae - முற்றத்திலே
போந்து,Poanthu - வந்து
நீ,Nee - நீ
விளையாட,Vilaiyaada - (நான்) விளையாடும்படி
வா,Vaa - வருவாயாக
என்று,Endru - என்று (சந்திரனை அழைத்து)
நிலா,Nila - நின்று கொண்டு
நின்,Nin - உன்னை
புகழாநின்ற,Pugazhaninra - புகழ்கின்ற
ஆயர் தம்,Aayar Tham - இடையர்களுடைய
கோ,Ko - தலைவராகிய நந்த கோபர்
நிலாவ,Nilaava - மனம் மகிழும்படி
சப்பாணி கொட்டாய்-;,Sappani Kottai - சப்பாணி கொட்டி யருள வேணும்;
குடந்தை கிடந்தானே! சப்பாணி-.,Kudanthai Kidanthane!Sappani - குடந்தை கிடந்தானே! சப்பாணி-.