| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 781 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 30 | வானகமும் மண்ணகமும் வெற்பும் ஏழ் கடல்களும் போனகம் செய்து ஆலிலைத் துயின்ற புண்டரீகனே தேனகம் செய் தண்ணறு மலர்த் துழாய் நன் மாலையாய் கூனகம் புகத்தெறித்த கொற்ற வில்லி யல்லையே | வானகமும், Vaanagaththum - வானுலகத்திலுள்ளளாரயும் மண்ணகமும், Mannagaththum - மண்ணுலகத்திலுள்ளாரையும் ஏழ் வெற்பும், Ezhu Verppum - ஸப்தகுலபர்வதங்களையும் ஏழ் கடல்களும், Ezhu Kadalgalum - ஸப்தஸாகரங்களையும் போனகம் செய்து, Ponagam Seidhu - அமுது செய்து ஆல் இலை துயின்ற, Aal Ilai Thuyinra - ஆலந்தளிரிலே கண்வளர்ந்தருளின் புண்டரீகனே!, Pundareekane - தாமரை போன்ற அவயவங்களையுடைய பெருமானே! தேன் செய் அகம், Then Sei Akam - தேன் நிறைந்த உட்புறத்தை யுடைத்தாய் தண், Than - குளிர்ந்ததாய் நறு, Naru - பரிமளிதமான மலர் துழாய், Malar Thuzhai - திருத்துழாயை கல் மாலையாய்!, Kal Maalaiyaai - நல்லமாலையாக அணிந்தவனே! (நீ) கூன், Koon - (கூனியினுடைய) கூனானது அகம் புக, Aham Puga - உள்ளே யொடுங்கும்படி தெறித்த, Theriththa - விட்டெறிந்த கொற்றம் வில்லி அல்லையே, Kotrham Villi Allaiye - வெற்றி வில்லை யுடையவனான்றோ |