Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை , மற்றும் சில தொகுப்பில் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீ நம்பிள்ளை அவர்களின் அவதாரிகை உள்ளடங்கியது.

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 783 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
783ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 32
குரக்கினப் படை கொடு குரை கடலின் மீது போய்
அரக்கர் அரங்க வெஞ்சரம் துரந்த வாதி நீ
இரக்க மண் கொடுத்து அவற்கு இரக்கம் ஒன்றும் இன்றியே
பரக்க வைத்து அளந்து கொண்ட பற்ப நாபன் அல்லையே
குரங்கு இனம் படைகொடு, Kurangu Inam Padaikodu - வாநகர்களின் திரளான சேனையைத் துணைகொண்டு
குரை கடலின் மீது போய், Kurai Kadalin Meedhu Poi - கோஷிக்கின்ற கடலில் (அணைகட்டி) எழுந்தருளி
அங்கு, Angu - அவ்விலங்கையிலுள்ள
அரக்கர், Arakkar - ராவணாதி ராக்ஷஸர்கள்
அரங்க, Aranga - அழியும்படி
வெம் சரம், Vem Saram - தீக்ஷ்ணமான அம்புகளை
துரந்த, Durandha - அவர்கள் மேல் பிரயோகித்த
ஆதி, Ati - வீரர்களில் தலைவன்
நீ, Ni - (எம்பெருமானே;) நீயே காண்க;
இரக்க, Irakka - நீ வாமநனாய்ச் சென்று யாசிக்க
மண்கொடுத்தவற்கு, Mankoduththavarku - உனக்கு மூவடி நிலம் தானங் கொடுத்த மஹாபலிக்கு
இருக்க, Irukka - குடியிருப்பதற்கு
ஒன்றும் இன்றியே, Ondrum Indriye - ஒருசாண்நிலமும் மிகாதபடி
பரக்க வைத்து, Parakka Vaiththu - (திருவடியை) மிகவும் விஸ்தாரமாக வைத்து
அளந்து கொண்ட, Alandhu Konda - (மூவுலகங்களையும்) ஸ்வாதீகப்படுத்திக் கொண்ட
பற்பபரதன் அல்லையே, Parappabharathan Allaiye - தாமரைபோன்ற திருவடிகளையுடைய பெருமானும் நீயே காண்.