| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 784 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 33 | மின் நிறத்து எயிறு அரக்கன் வீழ வெஞ்சரம் துரந்து பின்னவருக்கு அருள் புரிந்து அரசளித்த பெற்றியோய் நன் நிறத்து ஓர் இன்சொல் ஏழை பின்னை கேள்வ மன்னு சீர்ப் பொன்னிறத்த வண்ணனாய புண்டரீகன் அல்லையே | மின் நிறத்து எயிறு அரக்கன், Min Niraththu Eyyiru Arakkan - மின்னல் நிறத்தையொத்த பற்களையுடையனான இராவணன் வீழ, Veela - மாளும்படி வெம் சரம், Vem Saram - கொடிய அம்புகளை துரந்து, Durandhu - அவன் மேல் பிரயோகித்து (அவனை முடித்தருளி) பின்னவற்கு, Pinnavarku - அவனது தம்பியான விபீடணனுக்கு அருள் புரிந்து, Arul Purinthu - க்ருபை செய்தருளி அரசு அளித்த, Arasu Aliththa - பட்டாபிஷேகம் செய்து வைத்த பெற்றியோய்!, Pettriyoyi - பெருமானே! நல் சிறத்து, Nal Sirathu - நல்ல நிறத்தையுடையவளாய் ஓர் இன் சொல், Oru In Sol - ஒப்பற்ற மதுரமான வாக்கையுடையவளாய் ஏழை, Ezhaik - உன்பக்கல் சாபல்யமுடையவளான பின்னை, Pinnai - நப்பின்னைப் பிராட்டிக்கு கேள்வி, Kelvi - நாயகனானவனே! மன்னு சீர், Mannu Seer - நித்யளித்த கல்யாண குணங்களையுடையனாய் பொன் நிறந்த வண்ணன் ஆய, Pon Nirandha Vannan Aaya - பொன்போன்ற திவ்யமங்கள விக்ரஹத்தையுடையனான புண்டரீகன் அல்லையே, Pundareekan Allaiye - புண்டரீகாக்ஷனென்பவன் நீயே காண் |