Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 786 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
786ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 35
அம்பு உலாவு மீனுமாகி யாமையாகி யாழியார்
தம்பிரானுமாகி மிக்க தன்பு மிக்க தன்றியும்
கொம்பு அராவு நுண் மருங்குல் ஆயர் மாதர் பிள்ளையாய்
எம்பிரானும் ஆய வண்ணம் என் கொலோ எம் ஈசனே
என் இசனே, En Isane - எம்பெருமானே! (தேவரீர்)
ஆழியார் தம் பிரானும் ஆகி, Aazhiyaar Tham Piraanum Aagi - திருவாழியாழ்வானையுடைய பரமபுருஷனாயிருந்து வைத்து
அம்பு உலாவும் மீனும் ஆகி, Ambu Ulaavum Meenum Aagi - ஜலத்தில் உலாவுகின்ற மீனாகியும்
ஆமை ஆகி, Aamai Aagi - ஆமையாகியும் (அவதரித்து)
மிக்கது, Mikkathu - அதிசயத்தை அடைந்தருளிற்று
அன்பு மிக்கது, Anbu Mikkathu - மிகுந்த அன்பையும் காட்டியருளிற்று;
அன்றியும், Anriyum - இதற்கு மேலும்
கொம்பு அராவு நுண்மருங்குல் ஆயர் மாதர் பிள்ளை ஆய், Kombu Araavu Nunmarungul Aayar Maathar Pillai Aayi - வஞ்சிக்கொம்பு போலும் அரவு போலும் நுட்பமான இடையையுடைய இடைப் பெண்ணுக்குப் பிள்ளையாய்ப் பிறந்து
எம்பிரானும் ஆய வண்ணம் என் கொல், Embiraanum Aaya Vannam En Kol - எம்பிரானுமாக நின்ற நிலையும் என்ன அற்புதம்!.