திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 79 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
79பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஆறாம் திருமொழி - மாணிக்கக்கிண்கிணி) (கைகொட்டி விளையாடுதல் : சப்பாணிப்பருவம்) 5
புட்டியில் சேறும் புழுதியும் கொண்டு வந்து அட்டி யமுக்கி அகம் புக் கறியாமே சட்டித் தயிரும் தடாவினில் வெண்ணெயும் உண் பட்டிக்கன்றே கொட்டாய் சப்பாணி பற்பநாபா கொட்டாய் சப்பாணி–1-6-5
பதவுரை Show / Hide
புட்டியில்,Puttiyil - திருவரையிற் படிந்த
சேறும்,Serum - சேற்றையும்
புழுதியும்,Puzhiyum - புழுதி மண்ணையும்
கொண்டு வந்து,Kondu Vandu - கொணர்ந்து வந்து
அட்டி,Atti - (என் மேல்) இட்டு
அமுக்கி,Amukki - உறைக்கப் பூசி
அகம் புக்கு,Agam Pukku - வீட்டினில் புகுந்து
அறியாமே,Ariyamae - (எனக்கு நீ) தெரியாதபடி
சட்டி தயிரும்,Satti Thairum - சட்டியில் வைத்திருக்கும் தயிரையும்
தடாவினில்,Thadavinil - மிடாக்களிலிருக்கிற
வெண்ணெயும்,Vennaiyum - வெண்ணெயையும்
உண்,Un - உண்ணுகின்ற
பட்டி கன்றே,Patti Kanrae - பட்டி மேய்ந்து திரியும் கன்று போன்றவனே!
சப்பாணி கொட்டாய்-;,Sappani Kottai - சப்பாணி கொட்டாய்-;
பற்ப நாபா,Parpa Naaba - ப்ரஜாபதி பிறப்பதற்குக் காரணமான தாமரைப் பூவைக்கொண்ட நாபியை யுடையவனே!
சப்பாணி கொட்டாய்-.,Sappani Kottai - சப்பாணி கொட்டாய்-;