Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 796 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
796ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 45
மண்ணுளாய் கொல் விண்ணுளாய் கொல் மண்ணுளே மயங்கி நின்று
எண்ணும் எண் அகப்படாய் கொல் என்ன மாயை நின்தமர்
கண்ணுளாய் கொல் சேயை கொல் அநந்தன் மேல் கிடந்த வெம்
புண்ணியா புனம் துழாய் அலங்கல் அம் புனிதனே
அனந்தன் மேல் கிடந்த, Ananthan Mel Kidandha - திருவனந்தாழ்வான்மேலே  சாய்ந்தருள்கின்ற
எம் புண்ணியா, Em Punniya - எங்களுடைய  ஸுக்ருத ஸ்வரூபியான எம்பெருமானே!
புனம் துழாய் அலங்கல், Punam Thuzhai Alankal - தன்னிலத்திலே வளர்ந்த திருத்துழாயாலே செய்யப்பட்ட மாலையையுடைய
அம் புனிதனே, Am Punitane - பரமபாவகனே!
மண் உளாய், Man Ulaai - லீலாவிபூதியில் அவதரித்திரா நின்றாய்;
விண் உளாய், Vin Ulaai - பரமபதத்தில் எழுந்தருளியிரா நின்றாய்;
மண்ணுள் மயஙகி நின்று எண்ணும் எண் அகப்படாய், Mannul Mayangki Nindru Ennum En Akappadaai - இந்நிலத்திலே விபரீதஜ்ஞாநிகளாயிருக்கிற ஸம்ஸாரிகளுடைய எண்ணங்களுக்கு விஷயமாகாதிருக்கிறாய்;
நின் தமர், Nin Thamar - உன்னுடையவர்களான அநந்ய ப்ரயோஜநர்களுக்கு
கண்ணுளாய், Kannulai - சக்ஷுர்விஷயமாகாநின்றாய்;
சேயை, Seyai - (மற்றையோர்க்கு) தூரஸ்தனாயிரா நின்றாய்;
என்ன மாயை, Enna Maayai - இது என்ன ஆச்சரியம்!