| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 796 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 45 | மண்ணுளாய் கொல் விண்ணுளாய் கொல் மண்ணுளே மயங்கி நின்று எண்ணும் எண் அகப்படாய் கொல் என்ன மாயை நின்தமர் கண்ணுளாய் கொல் சேயை கொல் அநந்தன் மேல் கிடந்த வெம் புண்ணியா புனம் துழாய் அலங்கல் அம் புனிதனே | அனந்தன் மேல் கிடந்த, Ananthan Mel Kidandha - திருவனந்தாழ்வான்மேலே சாய்ந்தருள்கின்ற எம் புண்ணியா, Em Punniya - எங்களுடைய ஸுக்ருத ஸ்வரூபியான எம்பெருமானே! புனம் துழாய் அலங்கல், Punam Thuzhai Alankal - தன்னிலத்திலே வளர்ந்த திருத்துழாயாலே செய்யப்பட்ட மாலையையுடைய அம் புனிதனே, Am Punitane - பரமபாவகனே! மண் உளாய், Man Ulaai - லீலாவிபூதியில் அவதரித்திரா நின்றாய்; விண் உளாய், Vin Ulaai - பரமபதத்தில் எழுந்தருளியிரா நின்றாய்; மண்ணுள் மயஙகி நின்று எண்ணும் எண் அகப்படாய், Mannul Mayangki Nindru Ennum En Akappadaai - இந்நிலத்திலே விபரீதஜ்ஞாநிகளாயிருக்கிற ஸம்ஸாரிகளுடைய எண்ணங்களுக்கு விஷயமாகாதிருக்கிறாய்; நின் தமர், Nin Thamar - உன்னுடையவர்களான அநந்ய ப்ரயோஜநர்களுக்கு கண்ணுளாய், Kannulai - சக்ஷுர்விஷயமாகாநின்றாய்; சேயை, Seyai - (மற்றையோர்க்கு) தூரஸ்தனாயிரா நின்றாய்; என்ன மாயை, Enna Maayai - இது என்ன ஆச்சரியம்! |