Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 81 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
81ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஆறாம் திருமொழி - மாணிக்கக்கிண்கிணி) (கைகொட்டி விளையாடுதல் : சப்பாணிப்பருவம்) 7
பரந்திட்டு நின்ற படு கடல் தன்னை
இரந்திட்ட கைம் மேல் எறி திரை மோத
கரந்திட்டு நின்ற கடலைக் கலங்க
சரந்தொட்ட கைகளால் சப்பாணி சார்ங்கவிற் கையனே சப்பாணி–1-6-7
பரந்திட்டு நின்ற,Parandhittu Nindra - (எல்லை காண வொண்ணாதபடி) பரவியுள்ள
படு கடல்,Padu Kadal - ஆழமான ஸமுத்ரமானது
தன்னை இரந்திட்ட,Thannai Irandhitta - (வழி விடுவதற்காகத்)தன்னை யாசித்த
கை மேல்,Kai Mel - கையின் மேலே
எறி திரை,Eri Thirai - வீசுகின்ற அலைகளினால்
மோத,Modha - மோதி யடிக்க
கரந்திட்டு நின்ற,Karandhittu Nindra - (முகங் காட்டாமல்) மறைந்து கிடந்த
கடல்,Kadal - அக் கடலுக்கு உரிய தேவதையான வருணன்
கலங்க,Kalanga - கலங்கி விடும்படி
சரம்,Saram - அம்புகளை
தொட்ட,Thotta - தொடுத்து விட்ட
கைகளால் சப்பாணி-;,Kaigalal Sappani - திருக்கைகளாலே சப்பாணி கொட்டியருள வேணும்.
சார்ங்கம் வில்,Sargam Vil - ஸ்ரீசார்ங்கமென்னும் தநுஸ்ஸை
கையனே,Kaiyane - (அப்போது) கையில் தரித்தவனே!
சப்பாணி-;,Sappani - சப்பாணி கொட்டியருள வேணும்.