திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 82 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
82பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஆறாம் திருமொழி - மாணிக்கக்கிண்கிணி) (கைகொட்டி விளையாடுதல் : சப்பாணிப்பருவம்) 8
குரக்கினத்தாலே குரை கடல் தன்னை நெருக்கி அணை கட்டி நீள் நீரிலங்கை அரக்கர் அவிய அடு கணையாலே நெருக்கிய கைகளால் சப்பாணி நேமி யங் கையனே சப்பாணி–1-6-8
பதவுரை Show / Hide
குரை,Kurai - கோக்ஷியா நின்ற
கடல் தன்னை,Kadal Thannai - ஸமுத்ரத்தை
நெருக்கி,Nerukki - (இரண்டு பக்கத்திலும்) தேங்கும்படி செய்து
குரங்கு,Kurangu - குரங்குகளினுடைய
இனத்தாலே,Inaththaalai - கூட்டங்களைக் கொண்டு
அணை கட்டி,Anai Katti - ஸேதுவைக் கட்டி முடித்து
நீள் நீர்,Neel Neer - பரந்துள்ள ஸமுத்ரத்தினால் சூழப்பட்ட
இலங்கை,Ilangai - லங்கையிலுள்ள
அரக்கர்,Arakkar - ராக்ஷஸர்களெல்லாம்
அலிய,Aliya - அழிந்து போம்படி
அடு கணையாலே,Adu Kanaiyaale - கொல்லும் தன்மையை யுடைய அம்புகளைக் கொண்டு
நெருக்கிய,Nerukkiya - நெருங்கப் போர் செய்த
கைகளால் சப்பாணி-;,Kaigalal Sappani - திருக்கைகளாலே சப்பாணி கொட்டியருள வேணும்.
நேமி,Nemi - திருவாழி ஆழ்வானை
அம் கையனே,Am Kaiyane - அழகிய கையிலேந்தினவனே!
சப்பாணி-.,Sappani - சப்பாணி கொட்டியருள வேணும்.