Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 82 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
82ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஆறாம் திருமொழி - மாணிக்கக்கிண்கிணி) (கைகொட்டி விளையாடுதல் : சப்பாணிப்பருவம்) 8
குரக்கினத்தாலே குரை கடல் தன்னை
நெருக்கி அணை கட்டி நீள் நீரிலங்கை
அரக்கர் அவிய அடு கணையாலே
நெருக்கிய கைகளால் சப்பாணி நேமி யங் கையனே சப்பாணி–1-6-8
குரை,Kurai - கோக்ஷியா நின்ற
கடல் தன்னை,Kadal Thannai - ஸமுத்ரத்தை
நெருக்கி,Nerukki - (இரண்டு பக்கத்திலும்) தேங்கும்படி செய்து
குரங்கு,Kurangu - குரங்குகளினுடைய
இனத்தாலே,Inaththaalai - கூட்டங்களைக் கொண்டு
அணை கட்டி,Anai Katti - ஸேதுவைக் கட்டி முடித்து
நீள் நீர்,Neel Neer - பரந்துள்ள ஸமுத்ரத்தினால் சூழப்பட்ட
இலங்கை,Ilangai - லங்கையிலுள்ள
அரக்கர்,Arakkar - ராக்ஷஸர்களெல்லாம்
அலிய,Aliya - அழிந்து போம்படி
அடு கணையாலே,Adu Kanaiyaale - கொல்லும் தன்மையை யுடைய அம்புகளைக் கொண்டு
நெருக்கிய,Nerukkiya - நெருங்கப் போர் செய்த
கைகளால் சப்பாணி-;,Kaigalal Sappani - திருக்கைகளாலே சப்பாணி கொட்டியருள வேணும்.
நேமி,Nemi - திருவாழி ஆழ்வானை
அம் கையனே,Am Kaiyane - அழகிய கையிலேந்தினவனே!
சப்பாணி-.,Sappani - சப்பாணி கொட்டியருள வேணும்.