| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 83 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஆறாம் திருமொழி - மாணிக்கக்கிண்கிணி) (கைகொட்டி விளையாடுதல் : சப்பாணிப்பருவம்) 9 | அளந்திட்ட தூணை அவன் தட்ட ஆங்கே வளர்ந்திட்டு வாளுகிர்ச் சிங்க வுருவாய் உளந்தொட் டிரணியன் ஒண் மார்வகலம் பிளந்திட்ட கைகளால் சப்பாணி பேய் முலை யுண்டானே சப்பாணி–1-6-9 | தூணை,Thoona - கம்பத்தை அவன்,Avan - அந்த ஹிரண்யாஸுரன் (தானே) தட்ட,Thatta - புடைக்க ஆங்கே,Aange - (அவன் புடைத்த) அந்த இடத்திலேயே வான் உகிர்,Vaan Ukir - கூர்மையான நகங்களை யுடைய சிங்கம் உருஆய்,Singam Uruaai - நரஸிம்ஹ மூர்த்தியாய் வளர்ந்திட்டு,Valarnthittu - வளர்ந்த வடிவத்துடன் தோன்றி உளம்,Ulam - (அவ்விரணியனது) மநஸ்ஸு (ஒருகால் இவ்விரணியனும் அநுகூலனாகக் கூடுமோ! என்று) தொட்டு,Thotta - பரிசோதித்துப் பார்த்து (பின்பு) இரணியன்,Iraaniyan - அவ்விரணியனுடைய ஒளி,Oli - ஒளி பொருந்திய மார்பு அகலம்,Maaarbu Akalam - மார்பின் பரப்படங்கலும் பிளந்திட்ட,Pilandhitta - (நகத்தாற்) பிளந்த கைகளால் சப்பாணி,Kaigalal Sappani - திருக்கைகளாலே சப்பாணி கொட்டியருள வேணும். பேய்,Paey - பூதனையின் முலை,Mulai - முலையை உண்டானே,Undaane - உண்டவனே! சப்பாணி-;,Sappani - சப்பாணி கொட்டியருள வேணும். |