| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 84 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஆறாம் திருமொழி - மாணிக்கக்கிண்கிணி) (கைகொட்டி விளையாடுதல் : சப்பாணிப்பருவம்) 10 | அடைந்திட்டு அமரர்கள் ஆழ் கடல் தன்னை மிடைந்திட்டு மந்தரம் மத்தாக நாட்டி வடம் சுற்றி வாசுகி வன் கயிறாகக் கடைந்திட்ட கைகளால் சப்பாணி கார் முகில் வண்ணனே சப்பாணி–1-6-10 | அமரர்கள்,Amarar - தேவர்கள் (துர்வாச முனி சாபத்தினால் தாம் இழந்த ஐச்வர்யத்தைப் பெறுதற்காக) அடைந்திட்டு,Adainthittu - (உன்னைச்) சரணமடைய (நீ) ஆழ்கடல் தன்னை,Aazh Kadal Thannai - ஆழமான க்ஷிராப்தியை (உன்னுடைய படுக்குமிடமென்று பாராமல்) விடைந்திட்டு,Vidaindhittu - நெருங்கி மந்தரம்,Mantharam - மந்தர பர்வதத்தை மத்து ஆக,Maththu Aaga - (கடைவதற்குரிய) மத்தாகும்படி கூட்டி,Kooti - நேராக நிறுத்தி வாசுகி,Vaasuki - வாசுகியென்னும் பாம்பாகிய வன்வடம்,Vanvadham - வலிய கயிற்றை கயிறு ஆக சுற்றி,Kayiru Aaga Sutri - (அந்த மந்தரமலையாகிற மத்திலே) கடை கயிறாகச் சுற்றி கடைந்திட்ட,Kadaiynthitta - கடைந்த கைகளால் சப்பாணி-;,Kaigalal Sappani - திருக்கைகளாலே சப்பாணி கொட்டியருள வேணும். கார்முகில் வண்ணனே,Kaarmugil Vannanae - காளமேகம் போன்ற நிறமுடையவனே! சப்பாணி-;,Sappani - சப்பாணி கொட்டியருள வேணும். |