Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 84 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
84ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஆறாம் திருமொழி - மாணிக்கக்கிண்கிணி) (கைகொட்டி விளையாடுதல் : சப்பாணிப்பருவம்) 10
அடைந்திட்டு அமரர்கள் ஆழ் கடல் தன்னை
மிடைந்திட்டு மந்தரம் மத்தாக நாட்டி
வடம் சுற்றி வாசுகி வன் கயிறாகக்
கடைந்திட்ட கைகளால் சப்பாணி கார் முகில் வண்ணனே சப்பாணி–1-6-10
அமரர்கள்,Amarar - தேவர்கள் (துர்வாச முனி சாபத்தினால் தாம் இழந்த ஐச்வர்யத்தைப் பெறுதற்காக)
அடைந்திட்டு,Adainthittu - (உன்னைச்) சரணமடைய (நீ)
ஆழ்கடல் தன்னை,Aazh Kadal Thannai - ஆழமான க்ஷிராப்தியை (உன்னுடைய படுக்குமிடமென்று பாராமல்)
விடைந்திட்டு,Vidaindhittu - நெருங்கி
மந்தரம்,Mantharam - மந்தர பர்வதத்தை
மத்து ஆக,Maththu Aaga - (கடைவதற்குரிய) மத்தாகும்படி
கூட்டி,Kooti - நேராக நிறுத்தி
வாசுகி,Vaasuki - வாசுகியென்னும் பாம்பாகிய
வன்வடம்,Vanvadham - வலிய கயிற்றை
கயிறு ஆக சுற்றி,Kayiru Aaga Sutri - (அந்த மந்தரமலையாகிற மத்திலே) கடை கயிறாகச் சுற்றி
கடைந்திட்ட,Kadaiynthitta - கடைந்த
கைகளால் சப்பாணி-;,Kaigalal Sappani - திருக்கைகளாலே சப்பாணி கொட்டியருள வேணும்.
கார்முகில் வண்ணனே,Kaarmugil Vannanae - காளமேகம் போன்ற நிறமுடையவனே!
சப்பாணி-;,Sappani - சப்பாணி கொட்டியருள வேணும்.