திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2 · அடைவு
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 85 | பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஆறாம் திருமொழி - மாணிக்கக்கிண்கிணி) (கைகொட்டி விளையாடுதல் : சப்பாணிப்பருவம்) 11 | ஆட் கொள்ளத் தோன்றிய ஆயர் தங் கோவினை
நாட் கமழ் பூம் பொழில் வில்லி புத்தூர்ப் பட்டன்
வேட்கையினால் சொன்ன சப்பாணி ஈரைந்தும்
வேட்கையினால் சொல்லுவார் வினை போமே–1-6-11 | பதவுரை Show / Hideஆள் கொள்ள,Aal Kolla - (அனைவரையும்) அடிமை கொள்வதற்காக தோன்றிய,Thonriya - திருவவதரித்த ஆயர் தம் கோவினை,Aayar Tham Kovinai - இடையர்களுக்குத் தலைவனான கண்ணனிடத்தில் வேட்கையினால்,Vetchaiyinaal - ஆசையினால் நாள்,Naal - எந்நாளிலும் கமழ்,Kamazh - மணம் வீசுகின்ற பூ,Poo - புஷ்பங்கள் வீசுகின்ற பொழில்,Pozhil - சோலைகளை யுடைய வில்லிபுத்தூர்,Villipuththur - ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்த பட்டன்,Pattan - பெரியாழ்வார் சொன்ன,Sonna - அருளிச் செய்த சப்பாணி ஈர் ஐந்தும்,Sappani Eer Aindhum - சப்பாணி கொட்டுதலைக் கூறிய பத்துப் பாசுரங்களையும் வேட்கையினால்,Vetchaiyinaal - இஷ்டத்தோடு சொல்லுவார்,Solluvaar - ஓதுகிறவர்களுடைய வினை,Vinai - பாபங்கள் போம்,Pom - அழிந்து போம். |