Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 85 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
85ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஆறாம் திருமொழி - மாணிக்கக்கிண்கிணி) (கைகொட்டி விளையாடுதல் : சப்பாணிப்பருவம்) 11
ஆட் கொள்ளத் தோன்றிய ஆயர் தங் கோவினை
நாட் கமழ் பூம் பொழில் வில்லி புத்தூர்ப் பட்டன்
வேட்கையினால் சொன்ன சப்பாணி ஈரைந்தும்
வேட்கையினால் சொல்லுவார் வினை போமே–1-6-11
ஆள் கொள்ள,Aal Kolla - (அனைவரையும்) அடிமை கொள்வதற்காக
தோன்றிய,Thonriya - திருவவதரித்த
ஆயர் தம் கோவினை,Aayar Tham Kovinai - இடையர்களுக்குத் தலைவனான கண்ணனிடத்தில்
வேட்கையினால்,Vetchaiyinaal - ஆசையினால்
நாள்,Naal - எந்நாளிலும்
கமழ்,Kamazh - மணம் வீசுகின்ற
பூ,Poo - புஷ்பங்கள் வீசுகின்ற
பொழில்,Pozhil - சோலைகளை யுடைய
வில்லிபுத்தூர்,Villipuththur - ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்த
பட்டன்,Pattan - பெரியாழ்வார்
சொன்ன,Sonna - அருளிச் செய்த
சப்பாணி ஈர் ஐந்தும்,Sappani Eer Aindhum - சப்பாணி கொட்டுதலைக் கூறிய பத்துப் பாசுரங்களையும்
வேட்கையினால்,Vetchaiyinaal - இஷ்டத்தோடு
சொல்லுவார்,Solluvaar - ஓதுகிறவர்களுடைய
வினை,Vinai - பாபங்கள்
போம்,Pom - அழிந்து போம்.