| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 855 | ஸ்ரீ திருச்சந்த விருத்தம் || 104 | கடுங் கவந்தன் வக்கரன் கரன் முரன் சிரமவை இடந்து கூறு செய்த பல் படைத் தடக்கை மாயனே கிடந்து இருந்து நின்றி யங்கு போது நின்ன பொற் கழல் தொடர்ந்து வீள்விலாத தோர் தொடர்ச்சி நல்க வேண்டுமே | கடு, Kadu - க்ரூரனான கவந்தன், Kavandhan - கபந்ததென்ன வக்கரன், Vakkaran - தந்தவக்த்ரனென்ன கரன், Karan - கரனென்ன முரன் சிறை அவை, Muran Sirai Avai - முரனென்ன (இவர்களுடைய தலைகளை இடந்து கூறு செய்த, Idandhu Koora Seitha - சிந்நபிந்நமாக்கினவனும் பல்படை தடகை, Palpadai Thadakai - பலவகைப்பட்ட ஆயுதங்களைப் பெரிய திருக்கைகளிலே உடையனுமான மாயனே, Maayaney - பெருமானே! கிடந்து இருந்து நின்று இயங்குபோதும், Kidandhu Irundhu Nindru Iyangu Bodhum - படுக்கை இருக்கை நிற்கை திரிகை முதலிய ஸர்வாவஸ்தைகளிலும் நின்ன, Ninna - தேவரீருடைய பொன்கழல், Ponkazhal - அழகிய திருவடிகளையே தொடர்ந்து வீள்வு இலாதது ஓர் தொடர்ச்சி, Thodarnthu Veelvu Iladhu Oru Thodarchi - இடைவிடாது அதுவர்த்தித் திருக்கையாகிற ஒரு தொடர்பை நலக் வேண்டும், Nalak Vendum - தந்தருளவேணும். |