| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 90 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஏழாம் திருமொழி - தொடர்சங்கிலிகை) (தளர் நடை நடத்தல், தளர் நடைப் பருவம்) 5 | முன்னலோர் வெள்ளிப் பெரு மலைக் குட்டன் மொடுமொடு விரைந்தோட பின்னைத் தொடர்ந்ததோர் கருமலைக் குட்டன் பெயர்ந்தடி யிடுவது போல் பன்னி யுலகம் பரவி யோவாப் புகழ்ப் பலதே வனென்னும் தன் நம்பி யோடப் பின் கூடச் செல்வான் தளர் நடை நடவானோ–1-7-5 | முன்,Mun - முன்னே நல்,Nal - அழகிய ஓர்,Or - ஒப்பற்ற வெள்ளி பெருமலை,Velli perumalai - பெரிய வெள்ளிமலை பெற்ற குட்டன்,Kuttan - குட்டி மொடுமொடு,Modu modu - திடுதிடென்று விரைந்து,Viraindhu - வேகங்கொண்டு ஓட,Oda - ஓடிக்கொண்டிருக்க, பின்னை,Pinnai - (அந்தப் பிள்ளையின்) பின்னே தொடர்ந்தது,Thodarndhathu - (தன் செருக்காலே அப்பிள்ளையைப் பிடிப்பதற்காக) தொடர்ந்ததுமாகிய ஓர்,Or - ஒப்பற்ற கரு மலை,Karu malai - கரு நிறமான மலை பெற்ற குட்டன்,Kuttan - குட்டி பெயர்ந்து,Peyarnthu - தானிருக்குமிடத்தை விட்டுப் புறப்பட்டு அடி இடுவது போல்,Adi iduvathu pol - அடி யிட்டுப் போவது போல, உலகம்,Ulagam - லோகமெல்லாங்கூடி பன்னி,Panni - (தங்களாலான வரையிலும்) ஆராய்ந்து பரவி,Paravi - ஸ்தோத்ரஞ்செய்தும் ஓவா,Ovaa - முடிவு காண முடியாத புகழ்,Pugazh - கீர்த்தியை யுடைய பலதேவன் என்னும்,Baladevan ennum - பலராமன் என்கிற தன் நம்பி ஓட,Than nambi oda - தன்னுடைய தமையன் (முன்னே) ஓடிக்கொண்டிருக்க பின் கூட செல்வான்,Pin kooda selvaan - (அவனைப் பிடிக்க வேணுமென்ற எண்ணத்தினால் அவன்) பின்னே உடன் செல்பவனான இக் கண்ணபிரான் தளர்நடை நடவானோ,Thalar nadai nadavano - இளநடையை நடக்கமாட்டானோ? (நடக்கவேணும்.) |