Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 927 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
927அமலனாதிபிரான் || 1
அமலனாதிபிரான் அடியார்க்கு என்னை ஆட்படுத்த
விமலன் விண்ணவர் கோன் விரையார் பொழில் வேங்கடவன்
நிமலன் நின்மலன் நீதி வானவன் நீண் மதிள் அரங்கத்தம்மான் திருக்
கமல பாதம் வந்து என் கண்ணினுள்ளன ஒக்கின்றதே
அமலன், Amalan - பரிசுத்தனாய்
ஆதி, Adhi - ஜகத்கார பூதனாய்
பிரான், Piran - உபகாரகனாய்
என்னை, Ennai - (இழி குலத்தவனான) என்னை
அடியார்க்கு, Adiyarku - (தனது) அடியவர்களான பாகவதர்களுக்கு
ஆள்படுத்த, Aalpadutha - ஆட்படுத்துகையாலே வந்த
விமலன், Vimalan - சிறந்த புகரை யுடையனாய்
விண்ணவர் கோன், Vinnavar Kon - நித்யஸூரிகட்குத் தலைவனாயிருந்து வைத்து (ஆஸ்ரிதர்கட்காக)
விரை ஆர் பொழில், Virai Ar Pol - பரிமளம் மிக்க சோலைகளை யுடைய
வேங்கடவன், Vengadavan - திருவேங்கடமலையில் வந்து தங்குமவனாய்
நிமலன், Nimalan - ஆஸ்ரயிப்பார்க்கு அரியனாயிருக்கையாகிற குற்றமற்று;ஆஸ்ரித பாரதக்திரியத்தை வெளியிட்டு நிற்குமவனாய்
நின்மலன், Ninmalan - அடியாருடைய குற்றத்தைக் காண்கையாகிற தோஷமில்லாத வத்ஸலனாய்
நீதி வானவன், Neethi Vanavan - சேஷ சேஷி முறை வழுவாதபடி நியாயமே செல்லும் நிலமான பரமபதத்துக்கு நிர்வாஹகனாய்
நீள் மதிள், Neel Mathil - உயர்ந்த மதிள்களை யுடைய
அரங்கத்து, Arangathu - கோயிலிலே (கண் வளர்ந்தருளுகிற)
அம்மான், Ammaan - ஸ்வாமியான அழகிய மணவாளனுடைய
திரு கமல பாதம், Thiru Kamala Padham - திருவடித் தாமரைகளானவை
வந்து, Vandhu - தானே வந்து
என் கண்ணின் உள்ளன ஒக்கின்றதே, En Kannin Ullan Okkindrathe - என் கண்ணுக்குள்ளே புகுந்தன போலிரா நின்றனவே