| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 928 | அமலனாதிபிரான் || 2 | உவந்த உள்ளத்த்னாய் உலகம அளந்து அண்டமுற நிவர்ந்த நீண் முடியன் அன்று நேர்ந்த நிசாசரரைக் கவர்ந்த வெங்கணைக் காகுத்தன் கடியார் பொழில் அரங்கத்தம்மான் அரைச் சிவந்த வாடையின் மேல் சென்றதாம் என சிந்தைனையே | உவந்த உள்ளத்தன் ஆய், Uvandha Ullathaan Aay - மகிழ்ச்சியோடு கூடிய மனத்தை யுடையவனாய்க் கொண்டு உலகம் அளந்து, Ulakam Alanthu - மூவுலகங்களையும் அளந்து அண்டம் உற, Andam Ur - அண்ட கடாஹத்தளவுஞ் சென்று முட்டும்படி நிவந்த, Nivandha - உயர்த்தியை அடைந்த நீள் முடியன், Neel Mudian - பெரிய திருமுடியை யுடையவனாய் அன்று, Andru - முற்காலத்தில் நேர்ந்த, Neerndha - எதிர்த்து வந்த நிசரசரரை, Nisarasararai - ராக்ஷஸர்களை கவர்ந்த, Kavarntha - உயிர் வாங்கின வெம் கணை, Vem Ganai - கொடிய அம்புகளை யுடைய காகுத்தன், Kaakuthan - இராம பிரானாய் கடி ஆர், Kadi Ar - மணம் மிக்க பொழில், Pol - சோலைகளை யுடைய அரங்கத்து, Arangathu - ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளியிருப்பவனான அம்மான், Ammaan - எம்பிரானுடைய அரை, Arai - திருவரையில் (சாத்திய) சிவந்த ஆடையின் மேல், sivandha Aadiyin Mel - பீதாம்பரத்தின் மேல் என சிந்தனை சென்றது, Ena Sindhanai Sendradhu - என்னுடைய நினைவானது ஆம் பதிந்ததாம் |