Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 928 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
928அமலனாதிபிரான் || 2
உவந்த உள்ளத்த்னாய் உலகம அளந்து அண்டமுற
நிவர்ந்த நீண் முடியன் அன்று நேர்ந்த நிசாசரரைக்
கவர்ந்த வெங்கணைக் காகுத்தன் கடியார் பொழில் அரங்கத்தம்மான் அரைச்
சிவந்த வாடையின் மேல் சென்றதாம் என சிந்தைனையே
உவந்த உள்ளத்தன் ஆய், Uvandha Ullathaan Aay - மகிழ்ச்சியோடு கூடிய மனத்தை யுடையவனாய்க் கொண்டு
உலகம் அளந்து, Ulakam Alanthu - மூவுலகங்களையும் அளந்து
அண்டம் உற, Andam Ur - அண்ட கடாஹத்தளவுஞ் சென்று முட்டும்படி
நிவந்த, Nivandha - உயர்த்தியை அடைந்த
நீள் முடியன், Neel Mudian - பெரிய திருமுடியை யுடையவனாய்
அன்று, Andru - முற்காலத்தில்
நேர்ந்த, Neerndha - எதிர்த்து வந்த
நிசரசரரை, Nisarasararai - ராக்ஷஸர்களை
கவர்ந்த, Kavarntha - உயிர் வாங்கின
வெம் கணை, Vem Ganai - கொடிய அம்புகளை யுடைய
காகுத்தன், Kaakuthan - இராம பிரானாய்
கடி ஆர், Kadi Ar - மணம் மிக்க
பொழில், Pol - சோலைகளை யுடைய
அரங்கத்து, Arangathu - ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளியிருப்பவனான
அம்மான், Ammaan - எம்பிரானுடைய
அரை, Arai - திருவரையில் (சாத்திய)
சிவந்த ஆடையின் மேல், sivandha Aadiyin Mel - பீதாம்பரத்தின் மேல்
என சிந்தனை சென்றது, Ena Sindhanai Sendradhu - என்னுடைய நினைவானது ஆம் பதிந்ததாம்