திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 93 | பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஏழாம் திருமொழி - தொடர்சங்கிலிகை) (தளர் நடை நடத்தல், தளர் நடைப் பருவம்) 8 | பக்கம் கருஞ்சிறுப் பாறை மீதே அருவிகள் பகர்ந்தனைய
அக்கு வடமிழிந் தேறித் தாழ அணி யல்குல் புடை பெயர
மக்க ளுலகினில் பெய்தறியாத மணிக் குழவி யுருவின்
தக்க மா மணி வண்ணன் வாசு தேவன் தளர்நடை நடவானோ–1-7-8 | பதவுரை Show / Hideகரு,Karu - கருநிறமான சிறு,Siru - சிறிய பாறை,Parai - மலையினுடைய பக்கம் மீது,Pakka meedhu - பக்கத்திலே அருவிகள்,Aruvigal - (மேடுபள்ளமுள்ள இடங்களிற் பாய்கிற) நீரருவிகள் பகர்ந்து அனைய,Pakarnthu anaiya - ப்ரகாசிப்பதை ஒத்திருக்கிற அக்கு வடம்,Akku vadam - (திருவரையிற் சாத்திய) சங்கு மணி வடமானது ஏறி இழிந்து தாழ,Eri izhinthu thaazha - உயர்ந்தும் தாழ்ந்தும் தொடை ப்ரகாசிக்கவும் அணி,Ani - அழகிய அல்குல்,Algul - நிதம்பம் புடை,Pudai - பக்கங்களிலே பெயர,Peyara - அசையவும் உலகினில்,Ulaginil - உலகத்திலுள்ள மக்கள்,Makkal - மனிதர் பெய்து அறியா,Peythu ariya - பெற்றறியாத மணி குழலி உருவி்ன்,Mani kuzhal uruvin - அழகிய குழந்தை வழவத்தை யுடையவனும் தக்க மா மணிவண்ணன்,Thakka ma manivannan - தகுதியான நீல மணி போன்ற நிறத்தை யுடையவனும் வாசுதேவன்,Vasudevan - வஸுதேவ புத்திரனுமான இவன் தளர் நடை நடவானோ .,Thalar nadai nadavano - இளநடையை நடக்கமாட்டானோ? (நடக்கவேணும்.) |