திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 93 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
93பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஏழாம் திருமொழி - தொடர்சங்கிலிகை) (தளர் நடை நடத்தல், தளர் நடைப் பருவம்) 8
பக்கம் கருஞ்சிறுப் பாறை மீதே அருவிகள் பகர்ந்தனைய அக்கு வடமிழிந் தேறித் தாழ அணி யல்குல் புடை பெயர மக்க ளுலகினில் பெய்தறியாத மணிக் குழவி யுருவின் தக்க மா மணி வண்ணன் வாசு தேவன் தளர்நடை நடவானோ–1-7-8
பதவுரை Show / Hide
கரு,Karu - கருநிறமான
சிறு,Siru - சிறிய
பாறை,Parai - மலையினுடைய
பக்கம் மீது,Pakka meedhu - பக்கத்திலே
அருவிகள்,Aruvigal - (மேடுபள்ளமுள்ள இடங்களிற் பாய்கிற) நீரருவிகள்
பகர்ந்து அனைய,Pakarnthu anaiya - ப்ரகாசிப்பதை ஒத்திருக்கிற
அக்கு வடம்,Akku vadam - (திருவரையிற் சாத்திய) சங்கு மணி வடமானது
ஏறி இழிந்து தாழ,Eri izhinthu thaazha - உயர்ந்தும் தாழ்ந்தும் தொடை ப்ரகாசிக்கவும்
அணி,Ani - அழகிய
அல்குல்,Algul - நிதம்பம்
புடை,Pudai - பக்கங்களிலே
பெயர,Peyara - அசையவும்
உலகினில்,Ulaginil - உலகத்திலுள்ள
மக்கள்,Makkal - மனிதர்
பெய்து அறியா,Peythu ariya - பெற்றறியாத
மணி குழலி உருவி்ன்,Mani kuzhal uruvin - அழகிய குழந்தை வழவத்தை யுடையவனும்
தக்க மா மணிவண்ணன்,Thakka ma manivannan - தகுதியான நீல மணி போன்ற நிறத்தை யுடையவனும்
வாசுதேவன்,Vasudevan - வஸுதேவ புத்திரனுமான இவன்
தளர் நடை நடவானோ .,Thalar nadai nadavano - இளநடையை நடக்கமாட்டானோ? (நடக்கவேணும்.)