திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2 · அடைவு

and/or and/or Clear

Search Results for: 930 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
930அமலனாதிபிரான் || ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிய அவதாரிகை — திரு நாபீ கமலத்தோடே சேர்ந்த திரு வுதர பந்தத்தை அனுபவிக்கிறார்- 4
சதுரமா மதிள் சூழ் இலங்கைக்கு இறைவன் தலை பத்து உதிர வோட்டி ஓர் வெங்கணை வுய்த்தவன் ஓத வண்ணன் மதுர மா வண்டு பாட மா மயிலாட அரங்கத்தம்மான் திரு வயிற்று உதர பந்தம் என்னுள்ளத்துள் நின்றுலாகின்றதே
பதவுரை Show / Hide
சதுரம், Sadhuram - நாற்சதுரமாய்
மா, Maa - உயர்ந்திருக்கிற
மதிள்சூழ், Mathilsoozh - மதிள்களாலே சூழப்பட்ட
இலங்கைக்கு, Ilangaikku - லங்கா நகரத்திற்கு
இறைவன், Iraivan - நாதனான இராவணனை
ஓட்டி, Ootti - (முதல் நாள் யுத்தத்தில்) தோற்று ஓடும்படி செய்து (மறுநாட்போரில்)
தலை பத்து, Thalai Pathu - (அவனது) தலைபத்தும்
உதிர, Udhira - (பனங்காய்போல்) உதிரும்படி
ஓர், Or - ஒப்பற்ற
வெம் கணை, Vem Ganai - கூர்மையான அஸ்த்ரத்தை
உய்த்தவன், Uyththavan - ப்ரயோகித்தவனும்
ஓதம் வண்ணன், Otham Vannan - கடல் போன்ற (குளிர்ந்த) வடிவை யுடையவனும்
வண்டு, Vantu - வண்டுகளானவை
மதுரமா, Madhurama - மதுரமாக
பாட, Paada - இசைபாட(அதற்குத் தகுதியாக)
மா மயில் ஆடு, Maa Mayil Aadu - சிறந்த மயில்கள் கூத்தாடப் பெற்ற
அரங்கத்து அம்மான், Arangathu Ammaan - திருவரங்கத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்வாமியுமான ஸ்ரீ ரங்கநாதனுடைய
திரு வயிறு உதர பந்தம், Thiru Vayiru Udara Bandham - திருவயிற்றில். சாத்தியுள்ள ‘உதரபந்த’ மென்னும் திருவாபரணமானது
என் உள்ளத்துள் நின்று, En Ullathul Nindru - என் நெஞ்சினுள் நிலைத்து நின்று
உலாகின்றது, Ulaaginradhu - உலாவுகின்றது