| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 930 | அமலனாதிபிரான் || 4 | சதுரமா மதிள் சூழ் இலங்கைக்கு இறைவன் தலை பத்து உதிர வோட்டி ஓர் வெங்கணை வுய்த்தவன் ஓத வண்ணன் மதுர மா வண்டு பாட மா மயிலாட அரங்கத்தம்மான் திரு வயிற்று உதர பந்தம் என்னுள்ளத்துள் நின்றுலாகின்றதே | சதுரம், Sadhuram - நாற்சதுரமாய் மா, Maa - உயர்ந்திருக்கிற மதிள்சூழ், Mathilsoozh - மதிள்களாலே சூழப்பட்ட இலங்கைக்கு, Ilangaikku - லங்கா நகரத்திற்கு இறைவன், Iraivan - நாதனான இராவணனை ஓட்டி, Ootti - (முதல் நாள் யுத்தத்தில்) தோற்று ஓடும்படி செய்து (மறுநாட்போரில்) தலை பத்து, Thalai Pathu - (அவனது) தலைபத்தும் உதிர, Udhira - (பனங்காய்போல்) உதிரும்படி ஓர், Or - ஒப்பற்ற வெம் கணை, Vem Ganai - கூர்மையான அஸ்த்ரத்தை உய்த்தவன், Uyththavan - ப்ரயோகித்தவனும் ஓதம் வண்ணன், Otham Vannan - கடல் போன்ற (குளிர்ந்த) வடிவை யுடையவனும் வண்டு, Vantu - வண்டுகளானவை மதுரமா, Madhurama - மதுரமாக பாட, Paada - இசைபாட(அதற்குத் தகுதியாக) மா மயில் ஆடு, Maa Mayil Aadu - சிறந்த மயில்கள் கூத்தாடப் பெற்ற அரங்கத்து அம்மான், Arangathu Ammaan - திருவரங்கத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்வாமியுமான ஸ்ரீ ரங்கநாதனுடைய திரு வயிறு உதர பந்தம், Thiru Vayiru Udara Bandham - திருவயிற்றில். சாத்தியுள்ள ‘உதரபந்த’ மென்னும் திருவாபரணமானது என் உள்ளத்துள் நின்று, En Ullathul Nindru - என் நெஞ்சினுள் நிலைத்து நின்று உலாகின்றது, Ulaaginradhu - உலாவுகின்றது |