திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 931 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
931அமலனாதிபிரான் || ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிய அவதாரிகை — எனக்கு பற்றாசான ஸ்ரீ பெரிய பிராட்டியார் இருக்கிற திரு மார்பு கிடீர் என்னை ஸ்வரூப அநுரூபமான கைங்கர்யம் கொண்டது–என்கிறார். 5
பாரமாய பழ வினை பற்றறுத்து என்னைத் தன் வாரமாக்கி வைத்தான் வைத்த தன்றி யென்னுள் புகுந்தான் கோர மா தவம் செய்தனன் கொல் அறியேன் அரங்கத் தம்மான் திரு ஆர மார்பதன்றோ அடியேனை யாட் கொண்டதே
பதவுரை Show / Hide
பாரம் ஆய, Paaram Aaya - பொறுக்க முடியாத சுமையாயிராநின்ற
பழ வினை, Pala Vinai - அநாதியான பாபங்களின்
பற்று அறுத்து, Patru Aruthu - சம்பந்தத்தைத் தொலைத்து
என்னை, Ennai - (அதனால் பாபம் நீங்கப் பெற்ற) அடியேனை
தன் வாரம் ஆக்கி வைத்தான், Than Vaaram Aakki Vaithaan - தன்னிடத்தில் அன்பு உடையவனாகப் பண்ணி வைத்தான் (ரங்கநாதன்)
வைத்தது அன்றி, Vaithadhu Andri - இப்படி செய்து வைத்ததுமல்லாமல்
என்னுள் புகுந்தான், Ennul Pugundhaan - என் ஹ்ருதயத்திலும் ப்ரவேசித்து விட்டான்
(இப்படிப்பட்ட பாக்கியத்தைப் பெறுதற்கு உறுப்பாக நான்) கோரம் மா தவம், (Ippadippatta Paagiyaththaip Perutharku Uruppaaga Naan) Koram Maa Thavam - உக்ரமான பெரியதொரு தபஸ்ஸை
செய்தனன் கொல், Seydhanan Kol - (முற் பிறவியில்) செய்திருப்பேனோ என்னவோ?
அறியேன், Ariyen - அறிகிறேனில்லை;
அரங்கத்து அம்மான், Arangathu Ammaan - ஸ்ரீ ரங்கநாதனுடைய
திரு ஆரம், Thiru Aaram - பிராட்டியையும் முக்தாஹரத்தையும் உடைத்தான
மார்பு அது அன்றோ, Maarp Adhu Andro - அத் திரு மார்பன்றோ
அடியேனை, Adiyenai - தாஸனான என்னை
ஆள் கொண்டது, Aal Kondadhu - அடிமைப் படுத்திக் கொண்டது