Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 931 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
931அமலனாதிபிரான் || 5
பாரமாய பழ வினை பற்றறுத்து என்னைத் தன்
வாரமாக்கி வைத்தான் வைத்த தன்றி யென்னுள் புகுந்தான்
கோர மா தவம் செய்தனன் கொல் அறியேன் அரங்கத் தம்மான் திரு
ஆர மார்பதன்றோ அடியேனை யாட் கொண்டதே
பாரம் ஆய, Paaram Aaya - பொறுக்க முடியாத சுமையாயிராநின்ற
பழ வினை, Pala Vinai - அநாதியான பாபங்களின்
பற்று அறுத்து, Patru Aruthu - சம்பந்தத்தைத் தொலைத்து
என்னை, Ennai - (அதனால் பாபம் நீங்கப் பெற்ற) அடியேனை
தன் வாரம் ஆக்கி வைத்தான், Than Vaaram Aakki Vaithaan - தன்னிடத்தில் அன்பு உடையவனாகப் பண்ணி வைத்தான் (ரங்கநாதன்)
வைத்தது அன்றி, Vaithadhu Andri - இப்படி செய்து வைத்ததுமல்லாமல்
என்னுள் புகுந்தான், Ennul Pugundhaan - என் ஹ்ருதயத்திலும் ப்ரவேசித்து விட்டான்
(இப்படிப்பட்ட பாக்கியத்தைப் பெறுதற்கு உறுப்பாக நான்) கோரம் மா தவம், (Ippadippatta Paagiyaththaip Perutharku Uruppaaga Naan) Koram Maa Thavam - உக்ரமான பெரியதொரு தபஸ்ஸை
செய்தனன் கொல், Seydhanan Kol - (முற் பிறவியில்) செய்திருப்பேனோ என்னவோ?
அறியேன், Ariyen - அறிகிறேனில்லை;
அரங்கத்து அம்மான், Arangathu Ammaan - ஸ்ரீ ரங்கநாதனுடைய
திரு ஆரம், Thiru Aaram - பிராட்டியையும் முக்தாஹரத்தையும் உடைத்தான
மார்பு அது அன்றோ, Maarp Adhu Andro - அத் திரு மார்பன்றோ
அடியேனை, Adiyenai - தாஸனான என்னை
ஆள் கொண்டது, Aal Kondadhu - அடிமைப் படுத்திக் கொண்டது