திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2 · அடைவு

and/or and/or Clear

Search Results for: 933 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
933அமலனாதிபிரான் || ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை அருளிய அவதாரிகை — திரு வதரத்திலே அகப்பட்ட படி சொல்லுகிறார் – நீஞ்சப் புக்குத் தெப்பத்தை இழந்தேன் என்னுமா போலே 7
கையினார் சுரி சங்கனலாழியர் நீள் வரை போல் மெய்யினார் துளப விரையார் கமழ் நீண் முடி யெம் ஐயனார் அணி யரங்கனார் அரவின் அணை மிசை மேயனார் செய்யவாய் ஐயோ என்னைச் சிந்தை கவர்ந்ததுவே
பதவுரை Show / Hide
கையின், Kaiyin - திருக் கைகளில்
ஆர், Aar - பொருந்தியிருக்கிற
சுரி சங்கு, Suri Sangu - சுரியையுடைய திருச்சங்கையும்
அனல் ஆழியர், Anal Aazhiyar - தீ வீசுகின்ற திருவாழியையும் உடையராய்
நீள் வரை போல், Neel Varai Pol - பெரியதொரு மலை போன்ற
மெய்யனார், Meyyanar - திருமேனியை யுடையராய்
துளபம் விரை ஆர், Thulabam Virai Aar - திருத்துழாயின் பரிமளம் மிகப்பெற்று (அதனால்)
கமழ், Kamazh - பரிமளியா நின்றுள்ள
நீள்முடி, Neelmudi - உயர்ந்த திருவபிஷேகத்தை யுடையராய்
எம் ஐயனார், Em Aiyanar - எமக்கு ஸ்வாமியாய்
அணி அரங்கனார், Ani Aranganar - அழகு பொருந்திய திருவரங்கத்திற் கண் வளர்ந்தருள்பவராய்
அரவு இன் அணை மிசை மேய, Aravu In Anai Misai May - திருவனந்தாழ்வானாகிற இனிய திருப்பள்ளியின் மீது பொருந்திய
மாயனார், Maayanar - ஆச்சரியச் செய்கைகளை யுடையரான ஸ்ரீ ரங்கநாதருடைய
செய்ய வாய், Seyya Vai - சிவந்த திருப்பவளமானது
என்னை, Ennai - என்னுடைய
சிந்தை, Sindhai - நெஞ்சை
கவர்ந்தது, Kavarnthadhu - கொள்ளை கொண்டது;
ஐயோ, Aiyo - (ஆநந்தாதிசயக் குறிப்பு.)