| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 933 | அமலனாதிபிரான் || 7 | கையினார் சுரி சங்கனலாழியர் நீள் வரை போல் மெய்யினார் துளப விரையார் கமழ் நீண் முடி யெம் ஐயனார் அணி யரங்கனார் அரவின் அணை மிசை மேயனார் செய்யவாய் ஐயோ என்னைச் சிந்தை கவர்ந்ததுவே | கையின், Kaiyin - திருக் கைகளில் ஆர், Aar - பொருந்தியிருக்கிற சுரி சங்கு, Suri Sangu - சுரியையுடைய திருச்சங்கையும் அனல் ஆழியர், Anal Aazhiyar - தீ வீசுகின்ற திருவாழியையும் உடையராய் நீள் வரை போல், Neel Varai Pol - பெரியதொரு மலை போன்ற மெய்யனார், Meyyanar - திருமேனியை யுடையராய் துளபம் விரை ஆர், Thulabam Virai Aar - திருத்துழாயின் பரிமளம் மிகப்பெற்று (அதனால்) கமழ், Kamazh - பரிமளியா நின்றுள்ள நீள்முடி, Neelmudi - உயர்ந்த திருவபிஷேகத்தை யுடையராய் எம் ஐயனார், Em Aiyanar - எமக்கு ஸ்வாமியாய் அணி அரங்கனார், Ani Aranganar - அழகு பொருந்திய திருவரங்கத்திற் கண் வளர்ந்தருள்பவராய் அரவு இன் அணை மிசை மேய, Aravu In Anai Misai May - திருவனந்தாழ்வானாகிற இனிய திருப்பள்ளியின் மீது பொருந்திய மாயனார், Maayanar - ஆச்சரியச் செய்கைகளை யுடையரான ஸ்ரீ ரங்கநாதருடைய செய்ய வாய், Seyya Vai - சிவந்த திருப்பவளமானது என்னை, Ennai - என்னுடைய சிந்தை, Sindhai - நெஞ்சை கவர்ந்தது, Kavarnthadhu - கொள்ளை கொண்டது; ஐயோ, Aiyo - (ஆநந்தாதிசயக் குறிப்பு.) |