| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 934 | அமலனாதிபிரான் || 8 | பரியனாகி வந்த அவுணன் உடல் கீண்ட அமரர்க்கு அரிய வாதிப்பிரான் அரங்கத்து அமலன் முகத்துக் கரிய வாகிப் புடை பரந்து மிளிர்ந்து செவ்வரி யோடி நீண்ட வப் பெரிய வாய கண்கள் என்னைப் பேதைமை செய்தனவே | பரியன் ஆகி, Pariyan Aagi - மிகவும் ஸ்தூலமான வடிவை யுடையனாய்க் கொண்டு வந்த, Vandhu - (ப்ரஹ்லாதனை நலிய) வந்த அவுணன், Avunan - அஸூரனான இரணியனுடைய உடல், Udal - சரீரத்தை கீண்ட, Keendu - கிழித்துப் பொகட்டவனும் அமரர்க்கு, Amararku - பிரமன் முதலிய தேவர்கட்கும் அரிய, Ariya - அணுக முடியாதவனும் ஆதி, Adhi - ஜகத் காரண பூதனும் பிரான், Piran - மஹோபகாரகனும் அரங்கத்து, Arangathu - கோயிலில் எழுந்தருளியிருக்கிற அமலன், Amalan - பரமபாலநனுமாகிய எம்பெருமானுடைய முகத்து, Mugathu - திருமுக மண்டலத்தில் கரிய ஆகி, Kariya Aagi - கறுத்த நிறமுடையவையாய் புடை பரந்து, Putai Parandhu - விசாலங்களாய் மிளிர்ந்து, Milarndhu - பிரகாசமுடையவையாய் செவ்வரி ஓடி, Sevvary Oodi - செவ்வரி படர்ந்திருப்பனவாய் நீண்ட, Neendu - (காதுவரை) நீண்டிருப்பவனாய் பெரிய ஆய, Periya Aaya - பெருமை பொருந்தியவையுமான அக் கண்கள், Ak Kangal - அந்தத் திருக்கண்களானவை என்னை, Ennai - அடியேனை பேதைமை செய்தன, Paedhaimai Seydhan - உந்மத்தனாகச் செய்துவிட்டன |